Tuesday, September 12, 2017

திறந்தநிலை பல்கலை. பட்டம் வேலைக்கு தகுதியானது: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

2017-09-12@ 01:09:17




மதுரை: திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெறும் பட்டங்களும் வேலை வாய்ப்புக்கு தகுதியானவை என்பதால், பதவி உயர்வும், பணப்பலன்களும் வழங்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 

 மதுரையை சேர்ந்த ரத்தினவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: சென்னை ஐகோர்ட்டில் உதவியாளராக கடந்த 2000ம் ஆண்டில் நியமிக்கப்பட்டேன். திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பிஏ முடித்தேன். ஐகோர்ட் கிளையில் பணியாற்றியபோது கடந்த 2009ல் உதவி பிரிவு அலுவலராக பதவி உயர்வு வழங்கி ெசன்னைக்கு
மாற்றப்பட்டேன். ஆனால், எனக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு நிலுவையில் இருந்தபோது, கடந்த 13.7.2016ல் உதவி பிரிவு அலுவலராக வழங்கப்பட்ட பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டது.நான் முறையாக படிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளதாகவும், பிளஸ் 2 முடித்து திறந்தவெளியில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. பதவி உயர்வை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நூட்டி.ராமமோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர், ‘‘திறந்தநிலை பல்கலை.யில் பெறப்படும் இளநிலை பட்டங்கள், சென்னை பல்கலை.யால் வழங்கப்படும் இளங்கலை பட்டங்களுக்கு இணையானது அல்ல என்பதை ஏற்க முடியாது. ஏனெனில் திறந்தநிலை பல்கலை.யில் பெறும் பட்டங்கள் வேலைவாய்ப்புக்கு தகுதியானதாக கருத வேண்டுமென யூஜிசி கூறுகிறது. மத்திய அரசும் இதுதொடர்பாக உத்தரவிட்டுள்ளது. இதில், மாநில அரசு மட்டும் எப்படி மாறுபட முடியும்? ஐகோர்ட் விதிகளின்படியும் திறந்தநிலையில் பெறும் இளநிலை பட்டங்கள் வேலை வாய்ப்புக்கும், பதவி உயர்வுக்கும் தகுதியானது. இதில், மனுதாரருக்கு விளக்கமளிக்கவும் வாய்ப்பு வழங்கவில்லை. திறந்தநிலையில் பெறும் இளங்கலை பட்டம் பதவி உயர்வு பெற தகுதியானது. பதவி உயர்வை ரத்து செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே பதவி உயர்வு வழங்கிய நாளிலிருந்து உதவி பிரிவு அலுவலராக பதவி உயர்வும், அதற்குரிய பணப்பலன்களையும் வழங்க வேண்டும்,’’ என உத்தரவிட்டுள்ளனர்.
மும்பை மெயில் இன்று காலை புறப்படும்

2017-09-12@ 00:12:42

சென்னை: மகாராஷ்டிராவில் கடந்த வாரம் சரக்கு ரயில் தடம் புரண்டதால் மும்பை ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவது தொடர்கிறது. அதனால் நேற்று மாலை 4.30 மணிக்கு வரவேண்டிய மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 12 மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை சென்னை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம் காரணமாக நேற்றிரவு திங்கட்கிழமை 10.30 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்ல வேண்டிய மும்பை மெயில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு புறப்படும்.
தாசில்தார்களும் ஸ்டிரைக்:தாலுகா அலுவலகத்திற்கு பூட்டு
பதிவு செய்த நாள்11செப்
2017
23:45

திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் அரசு ஊழியர்களின் பேராட்டத்தால் தாலு<கா அலுவலகத்திற்கு பூட்டுபோட்டுவிட்டு வெளியேறியதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்தனர்.நெல்லையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பணிகள் ஸ்தம்பித்தன.

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சங்கங்கள் கடந்த 7ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஏற்கனவே நடந்த போராட்டங்களில் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தாலுகா அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை.அரசு பள்ளிகளில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகளும் செசயல்படவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் 15 தாலுகா அலுவலகங்கள், 3 கோட்டாட்சியர் அலுவலகங்களிலும்தாசில்தார்கள் மற்றும் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.இதனால் வருவாய்த்துறையில் எந்த பணிகளும் நடக்கவில்லை. குறிப்பாக நேற்று திங்கள்கிழமை மனுநீதிநாளில்மக்களிடம் பெறப்படும் மனுக்களை வகைப்படுத்துதல் அதற்கு பதில் சொல்வதற்கும் ஊழியர்கள்,அதிகாரிகள் இன்றி சிரமப்பட்டனர். இன்று 12ம் தேதி முதல் இதுவரை ஸ்டிரைக்கில் பங்கேற்காதஅரசு அலுவலர் ஒன்றியமும் பங்கேற்க இருப்பதால் போராட்டம் இன்னமும் தீவிரமடையும்எனவும் இதனால் மக்கள் மேலும் பாதிப்படையயும் வாய்ப்புள்ளது.
பணியில் சேர சென்றவருக்கு 'டிஸ்மிஸ்' ஆணை

பதிவு செய்த நாள்11செப்
2017
22:49




ஈரோடு: ஈரோட்டில், பணியில் சேர்வதற்காக சென்ற, அங்கன்வாடி உதவியாளருக்கு, பணி நீக்க ஆணை வழங்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்தார்.ஈரோடு, சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு
பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார்; துணி மடிக்கும் தொழிலாளி. இவர் மனைவி நாகரத்தினம், 26. சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் உள்ள, அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு, விண்ணப்பித்தார். தகுதி அடிப்படையில், பணி வழங்கப்பட்டது. ௮ம் தேதி பணியில்
சேர சென்றார். அப்போது, தகுதி அடிப்படையில், 24 நாட்கள் வயது குறைவாக உள்ளதாக கூறி, பணியில் சேர முடியாது என, பணி நீக்க ஆணை தரப்பட்டுள்ளது. இதனால், அவர் அதிர்ச்சி அடைந்தார். ஈரோடு, டி.ஆர்.ஓ., கவிதாவிடம், நேற்று மனு வழங்கினார். 

அதிகாரிகளிடம் விசாரித்த போது, 'வயது குறைவாக உள்ளதால், பணியில் சேர்க்க முடியாது. உரிய வயது வந்ததும், அடுத்து ஆட்கள் எடுக்கும் போது, முன்னுரிமைப்படி பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என விளக்கம் அளித்தனர்.
1.25 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பதிவு செய்த நாள்11செப்
2017
22:28

உயர் நீதிமன்ற தடையை மீறி, 60 ஆயிரம் ஆசிரியர், 65 ஆயிரம் அரசு ஊழியர்கள், நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் போராட்டம் நடத்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. தடையை மீறி, போராட்டம் தொடரும் என, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள், செப்., 9ல் அறிவித்தனர். அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால் நேற்று, 60 ஆயிரம் ஆசிரியர்கள், 65 ஆயிரம் அரசு ஊழியர்கள் என, மொத்தம், 1.25 லட்சம் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீது, அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதற்காக, அரசு ஊழியர்கள், தற்காலிக விடுப்பு எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பு கேட்போருக்கு, மருத்துவக் குழு ஆலோசனைக்கு பின், விடுப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -
மதுரை, நெல்லை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை 250ஆக அதிகரிப்பு
பதிவு செய்த நாள்11செப்
2017
23:39

மதுரை: மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லுாரிகளில், மாணவர் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்விரு கல்லுாரிகளில் நடப்பு ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படிப்பில், தலா 150 மாணவர்கள் நீட் தேர்வு மதிப்பெண் முறையில் சேர்க்கப்பட்டனர். இவ்விரு
கல்லுாரிகளும் பழமையானது என்பதால், இங்கு மாணவர் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. 

கவுன்சில் விதிப்படி மருத்துவ கல்லுாரியில் 250 மாணவர்களுக்கான நவீன வசதியுடன் கூடிய வகுப்பறை, ஆடிட்டோரியம், மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி விடுதி, முதல்வர் அறை, கூட்ட அரங்கு, நுாலகம் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கென மத்திய அரசு தனது பங்களிப்பு நிதி ரூ.60 கோடியை இரு கல்லுாரிகளுக்கும் ஒதுக்கியுள்ளது. மாநில ஒதுக்கீடு எங்கே: 2018 ல் 250 மாணவர்கள் சேர்க்கைக்கு, நவம்பருக்குள் மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய வேண்டும். 2018 மே- மாதத்திற்குள் அதற்கான அங்கீகாரம் கிடைத்தாகவேண்டும். இதற்காக மாநில
அரசு தமது பங்களிப்பு நிதியை இரு மருத்துவ கல்லுாரிகளுக்கும் ஒதுக்கி, கட்டுமான பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ கல்லுாரி டாக்டர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.

மதுரை டீன் மருதுபாண்டியன் கூறியதாவது: இரு கல்லுாரிக்கும் மத்திய அரசு பங்களிப்பு தொகை ஒதுக்கிஉள்ளது. நவம்பருக்குள் இந்திய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வருவதாக கூறியுள்ளனர். அங்கீகாரத்திற்கு பின், 2018 முதல் 250 மாணவர்கள் சேர்க்கப்படுவர், என்றார்
தற்கொலை செய்த பெண் உடல் இந்தோனேஷியா செல்கிறது
பதிவு செய்த நாள்11செப்
2017
23:02


நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில், கணவர் வீட்டில் இந்தோனேஷியா பெண் தற்கொலை செய்த வழக்கில், குடும்பத்தினர் புகார் செய்ய விரும்பாததால், உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. குலசேகரத்தைச் சேர்ந்தவர் சுபாஷ், 32. இந்தோனேஷியாவில் வேலை பார்த்த போது, அங்கு பெர்தாமியா வர்தானியா, 28, என்ற பெண்ணை
காதலித்தார். குலசேகரத்தில் இந்து முறைப்படி திருமணம் முடித்து, இந்தோனேஷியாவுக்கு சென்றனர். அங்கு, கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சுபாஷ், எந்த தகவலும் சொல்லாமல், குலசேகரம் வந்து விட்டார். அவரை தேடி பெர்தாமியாவும் வந்தார். ஆனால், சமரசம் ஏற்படவில்லை. இதனால், விரக்தியடைந்த பெர்தாமியா, சுபாஷ் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். 

அவரது உடலை, கணவன் வீட்டாரிடம் கொடுக்கவில்லை. 'பெண்ணின் உறவினர்கள் வந்த பின் முடிவு எடுக்கப்படும்' என, போலீசார் தெரிவித்திருந்தனர்.இந்தோனேஷியா துாதரகத்தில் இருந்து, இரண்டு அதிகாரிகள், குலசேகரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.
பெர்தாமியா மரணம் தொடர்பாக, அவரது குடும்பத்தாரிடம் இருந்து எந்த புகாரும் இல்லை எனவும், அவரது உடலை இந்தோனேஷியாவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் கடிதம் கொடுத்தனர். 

இதை தொடர்ந்து அவரது உடலை, விமானம் மூலம் அனுப்புவதற்கான பணி நடக்கிறது.

NEWS TODAY 15.07.2026