பணியில் சேர சென்றவருக்கு 'டிஸ்மிஸ்' ஆணை
பதிவு செய்த நாள்11செப்
2017
22:49

ஈரோடு: ஈரோட்டில், பணியில் சேர்வதற்காக சென்ற, அங்கன்வாடி உதவியாளருக்கு, பணி நீக்க ஆணை வழங்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்தார்.ஈரோடு, சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு
பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார்; துணி மடிக்கும் தொழிலாளி. இவர் மனைவி நாகரத்தினம், 26. சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் உள்ள, அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு, விண்ணப்பித்தார். தகுதி அடிப்படையில், பணி வழங்கப்பட்டது. ௮ம் தேதி பணியில்
சேர சென்றார். அப்போது, தகுதி அடிப்படையில், 24 நாட்கள் வயது குறைவாக உள்ளதாக கூறி, பணியில் சேர முடியாது என, பணி நீக்க ஆணை தரப்பட்டுள்ளது. இதனால், அவர் அதிர்ச்சி அடைந்தார். ஈரோடு, டி.ஆர்.ஓ., கவிதாவிடம், நேற்று மனு வழங்கினார்.
அதிகாரிகளிடம் விசாரித்த போது, 'வயது குறைவாக உள்ளதால், பணியில் சேர்க்க முடியாது. உரிய வயது வந்ததும், அடுத்து ஆட்கள் எடுக்கும் போது, முன்னுரிமைப்படி பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என விளக்கம் அளித்தனர்.
பதிவு செய்த நாள்11செப்
2017
22:49

ஈரோடு: ஈரோட்டில், பணியில் சேர்வதற்காக சென்ற, அங்கன்வாடி உதவியாளருக்கு, பணி நீக்க ஆணை வழங்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்தார்.ஈரோடு, சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு
பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார்; துணி மடிக்கும் தொழிலாளி. இவர் மனைவி நாகரத்தினம், 26. சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் உள்ள, அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு, விண்ணப்பித்தார். தகுதி அடிப்படையில், பணி வழங்கப்பட்டது. ௮ம் தேதி பணியில்
சேர சென்றார். அப்போது, தகுதி அடிப்படையில், 24 நாட்கள் வயது குறைவாக உள்ளதாக கூறி, பணியில் சேர முடியாது என, பணி நீக்க ஆணை தரப்பட்டுள்ளது. இதனால், அவர் அதிர்ச்சி அடைந்தார். ஈரோடு, டி.ஆர்.ஓ., கவிதாவிடம், நேற்று மனு வழங்கினார்.
அதிகாரிகளிடம் விசாரித்த போது, 'வயது குறைவாக உள்ளதால், பணியில் சேர்க்க முடியாது. உரிய வயது வந்ததும், அடுத்து ஆட்கள் எடுக்கும் போது, முன்னுரிமைப்படி பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என விளக்கம் அளித்தனர்.
No comments:
Post a Comment