Tuesday, September 12, 2017

1.25 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பதிவு செய்த நாள்11செப்
2017
22:28

உயர் நீதிமன்ற தடையை மீறி, 60 ஆயிரம் ஆசிரியர், 65 ஆயிரம் அரசு ஊழியர்கள், நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் போராட்டம் நடத்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. தடையை மீறி, போராட்டம் தொடரும் என, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள், செப்., 9ல் அறிவித்தனர். அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால் நேற்று, 60 ஆயிரம் ஆசிரியர்கள், 65 ஆயிரம் அரசு ஊழியர்கள் என, மொத்தம், 1.25 லட்சம் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீது, அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதற்காக, அரசு ஊழியர்கள், தற்காலிக விடுப்பு எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பு கேட்போருக்கு, மருத்துவக் குழு ஆலோசனைக்கு பின், விடுப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...