திறந்தநிலை பல்கலை. பட்டம் வேலைக்கு தகுதியானது: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
2017-09-12@ 01:09:17

மதுரை: திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெறும் பட்டங்களும் வேலை வாய்ப்புக்கு தகுதியானவை என்பதால், பதவி உயர்வும், பணப்பலன்களும் வழங்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
2017-09-12@ 01:09:17

மதுரை: திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெறும் பட்டங்களும் வேலை வாய்ப்புக்கு தகுதியானவை என்பதால், பதவி உயர்வும், பணப்பலன்களும் வழங்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த ரத்தினவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: சென்னை ஐகோர்ட்டில் உதவியாளராக கடந்த 2000ம் ஆண்டில் நியமிக்கப்பட்டேன். திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பிஏ முடித்தேன். ஐகோர்ட் கிளையில் பணியாற்றியபோது கடந்த 2009ல் உதவி பிரிவு அலுவலராக பதவி உயர்வு வழங்கி ெசன்னைக்கு
மாற்றப்பட்டேன். ஆனால், எனக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு நிலுவையில் இருந்தபோது, கடந்த 13.7.2016ல் உதவி பிரிவு அலுவலராக வழங்கப்பட்ட பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டது.நான் முறையாக படிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளதாகவும், பிளஸ் 2 முடித்து திறந்தவெளியில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. பதவி உயர்வை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நூட்டி.ராமமோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர், ‘‘திறந்தநிலை பல்கலை.யில் பெறப்படும் இளநிலை பட்டங்கள், சென்னை பல்கலை.யால் வழங்கப்படும் இளங்கலை பட்டங்களுக்கு இணையானது அல்ல என்பதை ஏற்க முடியாது. ஏனெனில் திறந்தநிலை பல்கலை.யில் பெறும் பட்டங்கள் வேலைவாய்ப்புக்கு தகுதியானதாக கருத வேண்டுமென யூஜிசி கூறுகிறது. மத்திய அரசும் இதுதொடர்பாக உத்தரவிட்டுள்ளது. இதில், மாநில அரசு மட்டும் எப்படி மாறுபட முடியும்? ஐகோர்ட் விதிகளின்படியும் திறந்தநிலையில் பெறும் இளநிலை பட்டங்கள் வேலை வாய்ப்புக்கும், பதவி உயர்வுக்கும் தகுதியானது. இதில், மனுதாரருக்கு விளக்கமளிக்கவும் வாய்ப்பு வழங்கவில்லை. திறந்தநிலையில் பெறும் இளங்கலை பட்டம் பதவி உயர்வு பெற தகுதியானது. பதவி உயர்வை ரத்து செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே பதவி உயர்வு வழங்கிய நாளிலிருந்து உதவி பிரிவு அலுவலராக பதவி உயர்வும், அதற்குரிய பணப்பலன்களையும் வழங்க வேண்டும்,’’ என உத்தரவிட்டுள்ளனர்.
மாற்றப்பட்டேன். ஆனால், எனக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு நிலுவையில் இருந்தபோது, கடந்த 13.7.2016ல் உதவி பிரிவு அலுவலராக வழங்கப்பட்ட பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டது.நான் முறையாக படிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளதாகவும், பிளஸ் 2 முடித்து திறந்தவெளியில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. பதவி உயர்வை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நூட்டி.ராமமோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர், ‘‘திறந்தநிலை பல்கலை.யில் பெறப்படும் இளநிலை பட்டங்கள், சென்னை பல்கலை.யால் வழங்கப்படும் இளங்கலை பட்டங்களுக்கு இணையானது அல்ல என்பதை ஏற்க முடியாது. ஏனெனில் திறந்தநிலை பல்கலை.யில் பெறும் பட்டங்கள் வேலைவாய்ப்புக்கு தகுதியானதாக கருத வேண்டுமென யூஜிசி கூறுகிறது. மத்திய அரசும் இதுதொடர்பாக உத்தரவிட்டுள்ளது. இதில், மாநில அரசு மட்டும் எப்படி மாறுபட முடியும்? ஐகோர்ட் விதிகளின்படியும் திறந்தநிலையில் பெறும் இளநிலை பட்டங்கள் வேலை வாய்ப்புக்கும், பதவி உயர்வுக்கும் தகுதியானது. இதில், மனுதாரருக்கு விளக்கமளிக்கவும் வாய்ப்பு வழங்கவில்லை. திறந்தநிலையில் பெறும் இளங்கலை பட்டம் பதவி உயர்வு பெற தகுதியானது. பதவி உயர்வை ரத்து செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே பதவி உயர்வு வழங்கிய நாளிலிருந்து உதவி பிரிவு அலுவலராக பதவி உயர்வும், அதற்குரிய பணப்பலன்களையும் வழங்க வேண்டும்,’’ என உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment