ஸ்ரீரங்கம், மயிலாடுதுறையில் குவியும் பக்தர்கள் இன்று முதல் காவிரி புஷ்கரம்
2017-09-12@ 01:05:53

திருச்சி: ஸ்ரீரங்கம், மயிலாடுதுறையில் காவிரி புஷ்கர விழா இன்று துவங்குகிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்தனர். நம் நாட்டில் கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்திரா, துங்கபத்ரா, சிந்து, பரணீதா ஆகிய 12 நதிகள் புனிதத்துவம் கொண்டவையாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இந்த நதிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலத்தில் புஷ்கரம் என்னும் பெயரில் புனிதமடைவதாக ஐதீகம். குருபகவான் சஞ்சாரத்தின் அடிப்படையில் நதிகளுக்கு புஷ்கரம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. புஷ்கர விழா நடைபெறும் நாட்களில் அந்த குறிப்பிட்ட நதியில் நீராடினால் அனைத்து புண்ணிய நதிகளிலும் பலமுறை நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக துலாம் ராசிக்கும் காவிரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே துலாம் ராசியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் காவிரியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. இன்று குருபகவான் துலாம் ராசியில் பிரவேசிக்கிறார். எனவே காவிரி மகாபுஷ்கரம் விழா இன்று(12ம் தேதி) தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது.
விழா நடைபெறும் 12 நாட்களும் ஜீயர்கள் மற்றும் மகான்களின் ஆசியுரைகளும், பல்சுவை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முக்கிய வைணவ மடாதிபதிகள், ஜீயர்கள் கலந்து கொள்கின்றனர். மகா புஷ்கரத்தில் காவிரி ஆற்றில் புனித நீராட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தர உள்ளனர். மயிலாடுதுறை துலாகட்டத்தில் நேற்று மாலை 6 மணிக்கு 12 ராசிகளுக்குரிய நதிகள் கடஸ்தாபனம் மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அதன் பின் 8.25 மணிக்கு ஆதீனகர்த்தர்கள், மடாதிபதிகள், துறவிகள் காவிரி புஷ்கர விழாவை தொடங்கி வைத்து புனிதநீராடுவர். தொடர்ந்து துறவியர் மாநாடு நடக்கிறது.
2017-09-12@ 01:05:53

திருச்சி: ஸ்ரீரங்கம், மயிலாடுதுறையில் காவிரி புஷ்கர விழா இன்று துவங்குகிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்தனர். நம் நாட்டில் கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்திரா, துங்கபத்ரா, சிந்து, பரணீதா ஆகிய 12 நதிகள் புனிதத்துவம் கொண்டவையாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இந்த நதிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலத்தில் புஷ்கரம் என்னும் பெயரில் புனிதமடைவதாக ஐதீகம். குருபகவான் சஞ்சாரத்தின் அடிப்படையில் நதிகளுக்கு புஷ்கரம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. புஷ்கர விழா நடைபெறும் நாட்களில் அந்த குறிப்பிட்ட நதியில் நீராடினால் அனைத்து புண்ணிய நதிகளிலும் பலமுறை நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக துலாம் ராசிக்கும் காவிரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே துலாம் ராசியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் காவிரியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. இன்று குருபகவான் துலாம் ராசியில் பிரவேசிக்கிறார். எனவே காவிரி மகாபுஷ்கரம் விழா இன்று(12ம் தேதி) தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது.
விழா நடைபெறும் 12 நாட்களும் ஜீயர்கள் மற்றும் மகான்களின் ஆசியுரைகளும், பல்சுவை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முக்கிய வைணவ மடாதிபதிகள், ஜீயர்கள் கலந்து கொள்கின்றனர். மகா புஷ்கரத்தில் காவிரி ஆற்றில் புனித நீராட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தர உள்ளனர். மயிலாடுதுறை துலாகட்டத்தில் நேற்று மாலை 6 மணிக்கு 12 ராசிகளுக்குரிய நதிகள் கடஸ்தாபனம் மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அதன் பின் 8.25 மணிக்கு ஆதீனகர்த்தர்கள், மடாதிபதிகள், துறவிகள் காவிரி புஷ்கர விழாவை தொடங்கி வைத்து புனிதநீராடுவர். தொடர்ந்து துறவியர் மாநாடு நடக்கிறது.
No comments:
Post a Comment