தற்கொலை செய்த பெண் உடல் இந்தோனேஷியா செல்கிறது
பதிவு செய்த நாள்11செப்
2017
23:02
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில், கணவர் வீட்டில் இந்தோனேஷியா பெண் தற்கொலை செய்த வழக்கில், குடும்பத்தினர் புகார் செய்ய விரும்பாததால், உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. குலசேகரத்தைச் சேர்ந்தவர் சுபாஷ், 32. இந்தோனேஷியாவில் வேலை பார்த்த போது, அங்கு பெர்தாமியா வர்தானியா, 28, என்ற பெண்ணை
காதலித்தார். குலசேகரத்தில் இந்து முறைப்படி திருமணம் முடித்து, இந்தோனேஷியாவுக்கு சென்றனர். அங்கு, கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சுபாஷ், எந்த தகவலும் சொல்லாமல், குலசேகரம் வந்து விட்டார். அவரை தேடி பெர்தாமியாவும் வந்தார். ஆனால், சமரசம் ஏற்படவில்லை. இதனால், விரக்தியடைந்த பெர்தாமியா, சுபாஷ் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
அவரது உடலை, கணவன் வீட்டாரிடம் கொடுக்கவில்லை. 'பெண்ணின் உறவினர்கள் வந்த பின் முடிவு எடுக்கப்படும்' என, போலீசார் தெரிவித்திருந்தனர்.இந்தோனேஷியா துாதரகத்தில் இருந்து, இரண்டு அதிகாரிகள், குலசேகரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.
பெர்தாமியா மரணம் தொடர்பாக, அவரது குடும்பத்தாரிடம் இருந்து எந்த புகாரும் இல்லை எனவும், அவரது உடலை இந்தோனேஷியாவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் கடிதம் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து அவரது உடலை, விமானம் மூலம் அனுப்புவதற்கான பணி நடக்கிறது.
பதிவு செய்த நாள்11செப்
2017
23:02
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில், கணவர் வீட்டில் இந்தோனேஷியா பெண் தற்கொலை செய்த வழக்கில், குடும்பத்தினர் புகார் செய்ய விரும்பாததால், உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. குலசேகரத்தைச் சேர்ந்தவர் சுபாஷ், 32. இந்தோனேஷியாவில் வேலை பார்த்த போது, அங்கு பெர்தாமியா வர்தானியா, 28, என்ற பெண்ணை
காதலித்தார். குலசேகரத்தில் இந்து முறைப்படி திருமணம் முடித்து, இந்தோனேஷியாவுக்கு சென்றனர். அங்கு, கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சுபாஷ், எந்த தகவலும் சொல்லாமல், குலசேகரம் வந்து விட்டார். அவரை தேடி பெர்தாமியாவும் வந்தார். ஆனால், சமரசம் ஏற்படவில்லை. இதனால், விரக்தியடைந்த பெர்தாமியா, சுபாஷ் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
அவரது உடலை, கணவன் வீட்டாரிடம் கொடுக்கவில்லை. 'பெண்ணின் உறவினர்கள் வந்த பின் முடிவு எடுக்கப்படும்' என, போலீசார் தெரிவித்திருந்தனர்.இந்தோனேஷியா துாதரகத்தில் இருந்து, இரண்டு அதிகாரிகள், குலசேகரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.
பெர்தாமியா மரணம் தொடர்பாக, அவரது குடும்பத்தாரிடம் இருந்து எந்த புகாரும் இல்லை எனவும், அவரது உடலை இந்தோனேஷியாவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் கடிதம் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து அவரது உடலை, விமானம் மூலம் அனுப்புவதற்கான பணி நடக்கிறது.
No comments:
Post a Comment