மயிலாடுதுறையில் மகா புஷ்கரம் இன்று துவக்கம்! : காவிரி தாய்க்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு
பதிவு செய்த நாள்
செப் 11,2017 22:59

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், மகா புஷ்கரம் விழா இன்று துவங்குகிறது. காவிரி துலா கட்டத்தில் நேற்று, காவிரி தாய் சிலைக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, ஆரத்தி எடுத்து பெண்கள் வழிபட்டனர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரியில், 144 ஆண்டுகளுக்குப் பின், மகா புஷ்கரம் விழா, இன்று கோலாகலமாக துவங்குகிறது. சங்கராச்சாரியார்கள், ஆதீன குருமகா சன்னிதானங்கள், துறவிகள், காவிரி ஆற்றில் புனித நீராட உள்ளனர். மாலை, வேதவியாசர், காவிரி தேவி படத்துடன், மயிலாடுதுறை துலா கட்டத்திலிருந்து ஊர்வலம் நடக்கிறது. இதில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள் கலந்து கொள்கின்றனர். இன்று துவங்கி, 24ம் தேதி வரை நடக்கும் புஷ்கர விழாவின் அனைத்து நாட்களிலும், வேத பாராயணம், ருத்ர பாராயணம், திருமுறை முற்றோதல், லலிதா, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்து, காவிரிக்கு ஆரத்தி எடுக்கப்படுகிறது.
பொறுப்பாளர் மாதாஜி ஞானேஸ்வரி தலைமையில், அமைக்கப்பட்டுள்ள குழுக்களில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, 24ம் தேதி வரை, தினமும் ஆரத்தி மற்றும் சகஸ்ரநாம பாராயணம் செய்ய உள்ளனர். ஆரத்தி குழுவினர், காவிரி துலா கட்டத்தின் தென் கரையில், புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள காவிரி தாய் சிலைக்கு, நேற்று காப்பு கட்டி, சகஸ்ரநாம அர்ச்சனை, ஆரத்தி எடுத்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில், பொறுப்பாளர்கள் மாதாஜி ஞானேஸ்வரி, புவனேஸ்வரி, பிரவீனா, புஷ்கரம் விழாக்குழு செயலர் முத்துக்குமாரசாமி, துணைத் தலைவர் ஜெகவீரபாண்டியன், இணைச் செயலர் அப்பர் சுந்தரம், பா.ஜ., தேசியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மகா புஷ்கர விழாவை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர், விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மயிலாடுதுறை நகரில், 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்திற்கு, இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, புறநகர் பகுதியில், மூன்று தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
21 இடங்களில் நடக்கிறது : குரு பகவான், 12 ஆண்டுகளுக்கு பின், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். அவர், ஓராண்டு காலம், துலாம் ராசியில் சஞ்சரிப்பார்.
இந்த ஓராண்டில், துலாம் ராசிக்குரிய புண்ணிய நதியான காவிரியில், பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள புஷ்கர தீர்த்தம் காவிரியில் கலந்து, நீராடுபவர்களின் பாவங்களை தீர்க்கும் என்பது நம்பிக்கை. கர்நாடகாவில், கா விரி உற்பத்தியாகும் தலைக்காவிரி, பாகமண்டலா, குஷால்நகர், ஸ்ரீரங்கபட்டணம், டி.நரசிபுரா, சிவசமுத்திரா, தலக்காடு, பன்னுார், கனகபுரா, சங்கமம் ஆகிய இடங்களில், புஷ்கரம் நடக்கிறது. தமிழகத்தில், மேட்டூர், பவானி கூடுதுறை, ஈரோடு, கொடுமுடி, பள்ளிபாளையம், பரமத்தி வேலுார், திருச்சி, சுவாமிமலை, திருவையாறு, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய இடங்களில் நடக்கிறது.
பதிவு செய்த நாள்
செப் 11,2017 22:59

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், மகா புஷ்கரம் விழா இன்று துவங்குகிறது. காவிரி துலா கட்டத்தில் நேற்று, காவிரி தாய் சிலைக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, ஆரத்தி எடுத்து பெண்கள் வழிபட்டனர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரியில், 144 ஆண்டுகளுக்குப் பின், மகா புஷ்கரம் விழா, இன்று கோலாகலமாக துவங்குகிறது. சங்கராச்சாரியார்கள், ஆதீன குருமகா சன்னிதானங்கள், துறவிகள், காவிரி ஆற்றில் புனித நீராட உள்ளனர். மாலை, வேதவியாசர், காவிரி தேவி படத்துடன், மயிலாடுதுறை துலா கட்டத்திலிருந்து ஊர்வலம் நடக்கிறது. இதில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள் கலந்து கொள்கின்றனர். இன்று துவங்கி, 24ம் தேதி வரை நடக்கும் புஷ்கர விழாவின் அனைத்து நாட்களிலும், வேத பாராயணம், ருத்ர பாராயணம், திருமுறை முற்றோதல், லலிதா, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்து, காவிரிக்கு ஆரத்தி எடுக்கப்படுகிறது.
பொறுப்பாளர் மாதாஜி ஞானேஸ்வரி தலைமையில், அமைக்கப்பட்டுள்ள குழுக்களில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, 24ம் தேதி வரை, தினமும் ஆரத்தி மற்றும் சகஸ்ரநாம பாராயணம் செய்ய உள்ளனர். ஆரத்தி குழுவினர், காவிரி துலா கட்டத்தின் தென் கரையில், புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள காவிரி தாய் சிலைக்கு, நேற்று காப்பு கட்டி, சகஸ்ரநாம அர்ச்சனை, ஆரத்தி எடுத்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில், பொறுப்பாளர்கள் மாதாஜி ஞானேஸ்வரி, புவனேஸ்வரி, பிரவீனா, புஷ்கரம் விழாக்குழு செயலர் முத்துக்குமாரசாமி, துணைத் தலைவர் ஜெகவீரபாண்டியன், இணைச் செயலர் அப்பர் சுந்தரம், பா.ஜ., தேசியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மகா புஷ்கர விழாவை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர், விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மயிலாடுதுறை நகரில், 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்திற்கு, இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, புறநகர் பகுதியில், மூன்று தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
21 இடங்களில் நடக்கிறது : குரு பகவான், 12 ஆண்டுகளுக்கு பின், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். அவர், ஓராண்டு காலம், துலாம் ராசியில் சஞ்சரிப்பார்.
இந்த ஓராண்டில், துலாம் ராசிக்குரிய புண்ணிய நதியான காவிரியில், பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள புஷ்கர தீர்த்தம் காவிரியில் கலந்து, நீராடுபவர்களின் பாவங்களை தீர்க்கும் என்பது நம்பிக்கை. கர்நாடகாவில், கா விரி உற்பத்தியாகும் தலைக்காவிரி, பாகமண்டலா, குஷால்நகர், ஸ்ரீரங்கபட்டணம், டி.நரசிபுரா, சிவசமுத்திரா, தலக்காடு, பன்னுார், கனகபுரா, சங்கமம் ஆகிய இடங்களில், புஷ்கரம் நடக்கிறது. தமிழகத்தில், மேட்டூர், பவானி கூடுதுறை, ஈரோடு, கொடுமுடி, பள்ளிபாளையம், பரமத்தி வேலுார், திருச்சி, சுவாமிமலை, திருவையாறு, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய இடங்களில் நடக்கிறது.
No comments:
Post a Comment