Friday, November 1, 2019


விருத்தாசலம் நகரில் தீராத பிரச்சினை: தெரு நாய்களின் அட்டூழியத்தால் 

மக்கள் எரிச்சல்




விருத்தாசலம்

விருத்தாசலம் நகரில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜங்ஷனிலிருந்து, பேருந்து நிலையம் செல்லும் பயணிகளை இந்த தெரு நாய்கள் துரத்தி தாக்குகின்றன. இந்த நாய்கள் இரு சக்கர வாகன ஓட்டிகளை வெறித்தனத்தோடு விரட்டுவது, சிறுவர்களை கடித்துக் குதறுவது என அட்டூழியம் செய்கின்றன.

முன்பெல்லாம் மாதத்திற்கு ஒருமுறை நகராட்சிகளில் இருந்து வரும் நாய் பிடி வாகனம், வீதியில் திரிந்து கொண்டிருக்கும் நாய்களை பிடித்து, மலைப்பகுதிக்கு கொண்டு சென்று விடும். அதனால் நகரப் பகுதிகளில் நாய்களின் நடமாட்டம் கட்டுக்குள் இருந்தன. பிராணிகள் நல அமைப்பினரின் எதிர்ப்பால் நாய் பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டு, இதனை நிறுத்தினர். இதனால் தெரு நாய்களின் பெருக்கம் அதிகரித்தது.

இதற்கு முடிவுகட்டும் வகையில், நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகை யில், நாய்களுக்கு இனப்பெருக்க கருத்தடை செய்ய முடிவு செய்யப்பட்டு, சுகாதாரத் துறை யால் நிதி ஒதுக்கப்பட்டது. சில இடங்களில் நாய் இனப்பெருக்கத்துக்கான கருத்தடை செய்யப் பட்ட போதிலும், அவையும் தற்போது கைவிடப் பட்ட நிலையில், நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து, அவை குழுவாக சுற்றித் திரிந்து விருத்தாசலம் நகர மக்களை அச்சுறுத்தி வரு கிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் விருத்தாசலம் நகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி விருத்தாசலம் நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர் குமாரிடம் கேட்டபோது, "ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய அரசு ரு.445 நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், இந்த தொகை கட்டுப்படி யாகவில்லை என்று கால்நடை மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்.

அவர்கள் ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய ரூ.900 கேட்கின்றனர். நாய் பிடிப்பதற்கு ஒரு நாய்க்கு ரூ.50 கேட்கின்றனர். கருத்தடை செய்த பின் 3 தினங்களுக்கு நாயைப் பராமரித்து, அதற்குரிய உணவை வழங்கி, பிடித்த இடத்திலேயே விட வேண்டும். இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். அரசும் அதனை ஆய்வு செய்து வருகிறது'' என்றார்.
நடுவானில் தவறான அலாரம்: குவைத்துக்கு புறப்பட்ட விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது 

 Published : 01 Nov 2019 16:15 pm



பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி, பிடிஐ

சென்னையிலிருந்து இன்று அதிகாலை 160 பயணிகளுடன் குவைத் புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் தவறான அலாரம் ஒலித்ததன் காரணமாக விமானிகள் 'நடுவான் நெருக்கடி'யை அறிவித்தனர்.

இதனையடுத்து குவைத் விமானம் சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியது.

இதுகுறித்து விமானத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

சென்னை விமான நிலையத்திலிருந்து இண்டிகோ ஏ 320 இயக்கும் 'சென்னை-குவைத் 6 இ -1751' விமானம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் புறப்பட்டுச் சென்றது.

புறப்பட்ட 15 நிமிடங்களில் தீ விபத்து எச்சரிக்கையை அறிவிக்கும் அலாரம் ஒலிப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக எமர்ஜென்ஸி அறிவிப்பு எண்.7700 ஐ அனைத்து விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் அனுப்பினர்.

இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக, விமானம் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. சென்னையில் தரையிறங்கிய விமானத்தில் ஆய்வு செய்யப்பட்ட பிறகு அலாரம் தவறானது என்பது உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு இண்டிகோ விமான செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

நான் நலமாக இருக்கிறேன்: வீடியோவில் பரவை முனியம்மா பேச்சு 

 Published : 01 Nov 2019 17:19 pm



கோப்புப் படம்

மதுரை

பிரபல நாட்டுபுறபாடல் கலைஞரும் நடிகையுமான பரவை முனியம்மா மறைந்துவிட்டதாக வதந்திகள் வெளியான நிலையில் அவரே வீடியோவில் தான் நலமாக இருப்பதாகப் பேசியுள்ளார்.


அந்த வீடியோவில் முதலில் பரவை முனியம்மாவின் மகள் ராக்கு பேசுகிறார். அவர், என் அம்மா நன்றாக இருக்கிறார். ரத்தம் ஏற்றியுள்ளோம். ஸ்கேன் எடுத்துள்ளார்கள் என சிகிச்சையை விவரிக்கிறார்.

பின்னர் பேசும் பரவை முனியம்மா, "நான் நல்லா இருக்கிறேன். இங்க மருத்துவமனையில் சேர்த்திருக்காங்க. ரத்தம் ஏத்திக்கிட்டு இருக்காங்க. நல்லா இருக்கிறேன்" எனக் கூறுகிறார்.

பரவை முனியம்மாவின் உடல்நிலை தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "பரவை முனியம்மா அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



பரவை முனியம்மா (இடது); அவரின் மகள் ராக்கு (வலது)

அவர் தற்போது வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர்களால் உரிய மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிகிச்சை மூலம் நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப உள்ளார்.

அவருக்கான மருத்துவ செலவுகள் அனைத்தும் வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகமே ஏற்று சிகிச்சை அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மதுரையில் நீதிமன்றத்தில் சொந்த வழக்குக்காக ஆஜராக வந்த நடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா நலமாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Indigo’s Chennai-Kuwait flight makes emergency landing after smoke alarm goes off
 
The incident took place soon after the flight took off from Chennai at its scheduled departure time of 12.40 am on Friday.

TNM Staff 

 
Friday, November 01, 2019 - 09:39
 
Image for Representation


A Chennai-Kuwait IndiGo 1751 flight made an emergency landing at the Chennai International Airport on Friday, less than an hour after its departure. The pilots had noticed that the smoke alarm had gone off in the cargo hold of the flight, and decided to turn around immediately. However, upon landing and inspection, it turned out to be a false alarm, state media reports.

The incident took place soon after the flight took off from Chennai at its scheduled departure time of 12.40 am on Friday but was made to turn around as soon as the smoke alarm from the flight’s cargo area was activated.

The aircraft was then safely landed by the pilots at 1.35 am at Chennai International Airport. Fire engines followed the aircraft after landing to ensure safety. Passengers were transferred to a different aircraft that then took off for Kuwait at 4.25 am. The three-and-a-half-hour flight has since landed safely.

Friday’s incident has been reported to the Directorate General of Civil Aviation (DGCA), India’s regulatory body.

In August this year, a Bengaluru-Chennai IndiGo flight opted for a go-around after flying as low as 500 feet above the ground near the Chennai airport’s runway. In aviation, a go-around refers to an aborted landing of an aircraft on its final approach to the runway. The aircraft reportedly flew very low over the Guindy-end of the main runway before climbing up for a go-around. A passenger, who was on the flight, told the Times of India that the pilot announced that they would land in 10 minutes and did not specify the cause for the delay.

In May, a Singapore-bound flight of Scoot Airways made an emergency landing in Chennai airport after the pilot detected smoke in the aircraft. The flight, originating from Trichy, with 161 passengers and crew on-board, landed at Chennai airport in the wee hours, after smoke emanated from the aircraft’s cargo hold.
`வேறு வழியின்றி போராட்டத்தைக் கைவிடுகிறோம்!’ - மருத்துவர்கள் வேலை நிறுத்தம் தற்காலிக வாபஸ்

சத்யா கோபாலன்

கடந்த ஒரு வாரமாக நீடித்துவந்த மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் தெரிவித்துள்ளார்.



மருத்துவர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஒரு வாரகாலமாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தங்களின் கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என அவர்கள் கூறிவந்தனர்.


மருத்துவர்கள் போராட்டம்

இதையடுத்து, நேற்று முன்தினம் மருத்துவர்கள் சங்கத்தின் சிலரைச் சந்தித்துப் பேசினார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அதன் பின்னர் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தனர், அமைச்சரைச் சந்தித்த மருத்துவர்கள். ஆனால், `அமைச்சருக்கு ஆதரவான மருத்துவர்கள் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர், எங்களிடம் யாரும் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை அதனால் போராட்டம் தொடரும்' என மற்றொரு தரப்பு மருத்துவர்கள் அறிவித்து நேற்றுவரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கிடையில், நேற்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ``தனியார் மருத்துவமனைகளில் 30,000 ரூபாய் சம்பளம் வழங்குகிறார்கள். ஆனால், அரசு மருத்துவர்களுக்கு முதல் மாதத்திலேயே 80,000 ரூபாய் வரை சம்பளம் வழங்குகிறோம். ஆனால், மத்திய அரசு வழங்கும் சம்பளம் வேண்டும் என போராட்டக்காரர்கள் கூறி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையைக் கேட்க அரசு தயாராக உள்ளது. மருத்துவர்கள் போராட்டத்தினால் நோயாளிகளுக்கு எந்தச் சிரமமும் ஏற்படக் கூடாது என்பது மட்டுமே எங்கள் நோக்கம்
.

விஜயபாஸ்கர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்று மாலைக்குள் (நேற்று) பணிகளுக்குத் திரும்ப வேண்டும். அப்படி பணிக்குத் திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு அந்த இடங்களில் புதிய மருத்துவர்கள் நியமிக்கும் பணி மாலை முதலே தொடங்கப்படும். இதுவே மருத்துவர்களுக்கு இறுதி எச்சரிக்கை” எனத் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

அமைச்சரின் பேச்சுக்குப் பிறகும் போராட்டம் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில், இன்று காலை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன், மருத்துவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளார்.

``மருத்துவர்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மக்களின் சேவையை முக்கியமாகக் கருதும் மருத்துவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போதே அவசர சிகிச்சை நோயாளிகளைக் கவனித்துவந்தனர். ஆனால், தற்போது சாதாரண சிகிச்சைகளும் அவசர சிகிச்சைகளாக மாறும் அபாயம் உள்ளது.


லட்சுமி நரசிம்மன்

மேலும், புயல் காரணமாகக் காய்ச்சல் அதிகரிக்கும் நிலையும் உள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டும், முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை ஏற்று வேறு வழியின்றி எங்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. வாபஸுக்குப் பிறகு, பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவோம் என அரசு தரப்பிலிருந்து தகவல் வந்ததால் போராட்டம் கைவிடப்படுகிறது.

முதல்வர் இதில் தலையிட்டு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாற்றக் கடிதம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை கடிதம் ஆகியவற்றை அரசு வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். முதல்வர் கோரிக்கையை ஏற்று மக்கள் நலன் கருதி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளார்.
மழையில் ஒழுகும் அரசு பேருந்து! - தென்னங்கீற்றால் அடைத்த மக்கள்

கே.குணசீலன்  vikatan news

கும்பகோணம் அருகே அரசு நகரப் பேருந்தின் மேற்கூரை ஓட்டையாக இருந்ததால் மழை நேரங்களில் பேருந்துக்குள் ஒழுகத் தொடங்கி விடும். இதைச் சரி செய்யாததால் தென்னங்கீற்றைக் கொண்டு ஓட்டையை அடைக்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.


போராட்டத்தில்

கும்பகோணம் அருகே அரசு நகரப் பேருந்து ஒன்று மழையில் ஒழுகி வந்ததால் மேற்கூரை வழியாக தண்ணீர் உள்ளே கொட்டியது. இதைச் சரி செய்யாததால் பேருந்தின் மேற்கூரையில் தென்னங்கீற்றைக் கொண்டு ஓட்டையை அடைக்கும் நூதனப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.


போராட்டத்தில்


கும்பகோணத்திலிருந்து திருப்புறம்பியம் கிராமத்திற்குத் தடம் எண் 6 என்ற அரசு நகரப் பேருந்து சென்று வருகிறது. இந்தப் பேருந்து முறையாக பராமரிக்கப்படாததால் மேற்பகுதியில் ஓட்டைகள் விழுந்தன. இதனால் மழை நேரங்களில் பேருந்திற்குள் மழை நீர் ஒழுகி தண்ணீர் உள்ளே புகுந்துவிடுவதால் அந்தப் பேருந்தில் செல்லும் பயணிகள் அனைவரும் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் என அனைவரும் கும்பகோணத்துக்குச் செல்வதற்கு இந்தப் பேருந்தைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் இந்தப் பேருந்தை சரி செய்ய வேண்டும் எனப் பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேருந்து ஒழுகத் தொடங்கி விடுகிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைத்துப் பயணிகளும் மழைநீரில் நனைந்து கொண்டே செல்கிற நிலை உள்ளது. மேலும், ஓட்டுநர் இருக்கைக்கு மேலேயே மழைநீர் சொட்டுவதால் ஓட்டுநரும் நனைந்து கொண்டே பேருந்தை ஓட்டி வருகிறார் எனப் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.


போராட்டம்


இதையடுத்து முறையாக பராமரிக்கப்படாத அரசுப் பேருந்தின் மேற்கூரையை கீற்று அமைத்து மழைநீர் வராமல் தடுக்கும் நூதனப் போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர். அதன்படி இன்னம்பூர் கிராமத்திற்கு வந்த அரசு நகரப் பேருந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சிலரும் மறித்தனர்.

பின்னர் பேருந்தின் மேற்கூரையில் ஏறி கீற்றுகளைக் கொண்டு ஓட்டைகளை அடைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்த சுவாமிமலை போலீஸார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வரும் 17ம் தேதி இந்தப் பேருந்துக்குப் பதிலாக புதிய பேருந்து இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.



போராட்டத்தில்

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``கும்பகோணத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் டெப்போ இயங்கி வருகிறது. ஆனால், இங்கிருந்து லோக்கல் ஏரியாவிற்குச் செல்லும் பேருந்துகள் ஓட்டையும் உடைசலுமாக இருக்கின்றன. இதைப் பராமரிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. `பஸ் ஒழுகுது. வேற பஸ்ஸோ அல்லது ஒழுகும் பஸ்ஸை சரி செய்தோ அனுப்புங்க' எனப் பல முறை கோரினோம். இதைக் கண்டு கொள்ளவே இல்லை. எப்படி ஒழுகுற கூரை வீட்டைக் கீற்று கொண்டு அடைப்போமோ அதே போல் ஒழுகும் இந்தப் பேருந்தை தென்னங்கீற்றைக் கொண்டு மேற்கூரையில் ஓட்டை அடைக்கும்படியான போராட்டத்தை நடத்தினோம்'' என்றனர்.
காய்ச்சல் பாதிப்புடன் குவியும் நோயாளிகள்! - திணறும் நாகை அரசு மருத்துவமனை

மு.இராகவன்PrasannaVenkatesh AB

காய்ச்சல் நோயால் குவியும் நோயாளிகள்  vikatan news


அரசு மருத்துவமனை

நாகை மாவட்டத்தில் வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நோயால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகிறார்கள். குறிப்பாக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்குச் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும், தினசரி கடும் ஜுரத்துடன் நோயாளிகள் பெருமளவு வருவதால் உள்நோயாளியாகச் சேர்க்க இடமின்றி மருத்துவமனை நிர்வாகம் தவிக்கிறது.


அரசு மருத்துவமனை

கடந்த மாதம் முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் நாகையைச் சுற்றியுள்ள நாகூர், திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமான காய்ச்சல் நோயாளிகள் நாகை தலைமை மருத்துவமனைக்குப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதில் சென்னை, திருப்பூர் போன்ற வெளியூரில் பணிபுரிபவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு, சாதாரண சீசன் காய்ச்சல் நோயாளிகளோடு ஒரே வார்டில் சிகிச்சை தந்தால் டெங்கு பரவிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டது. எனவே, டெங்கு நோயாளிகளுக்கு மாடியில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு அங்கு சிகிச்சை அளித்தனர். சாதாரண காய்ச்சலுக்கு ஆண், பெண், குழந்தைகள் எனத் தனித்தனியாகப் பிரித்து 80 படுக்கை வசதி கொண்ட வார்டு அமைக்கப்பட்டது.

எனினும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான காய்ச்சல் நோயாளிகள் வருவதால் அவர்களை உள்நோயாளிகளாகச் சேர்க்க இடவசதியில்லை. வேறெங்கும் செல்ல முடியாத ஏழை நோயாளிகள் தரையில் பாய் விரித்துப் படுத்து சிகிச்சை பெறுகின்ற அவலமும் நடக்கிறது. கடுமையாக ஜுரம் மற்றும் டெங்கு பாதிப்பில் வரும் நோயாளிகள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர். ரத்தப்பரிசோதனை செய்து உரிய ஊசி மருந்துகளோடு நிலவேம்பு கசாயமும் காய்ச்சல் நோயாளிகளுக்குத் தரப்படுகிறது. இத்தகைய நோயாளிகள் நாளுக்கு நாள் பெருகுவதால் எப்படி சிகிச்சை அளிப்பது என மருத்துவர்கள் திகைப்பில் இருக்கின்றனர்.



காய்ச்சல்

இதுபற்றி நாகை அரசு தலைமை மருத்துவமனை ஆர்.எம்.ஓ. முருகப்பாவிடம் பேசினோம். ``இதற்கென தனி வார்டு அமைத்துள்ளோம். தினமும் சீசன் காய்ச்சலால் சுமார் 200 நோயாளிகள் வருகிறார்கள். அதில் உள்நோயாளிகளாக சுமார் 40 பேர் சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க எம்.டி. லெவலில் டாக்டர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர். டெங்கு நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். தற்போது டெங்கு நோயாளி ஒருவர்கூட இல்லை. நோயாளிகளுக்கு உடனுக்குடன் வேண்டிய பரிசோதனைகள் செய்யப்பட்டு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஊசி, மருந்துகள் எல்லாமே போதுமான அளவு இருப்பில் உள்ளன. மிகவும் ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகள் மட்டுமே திருவாரூர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பப்படுகின்றனர்" என்றார்

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...