Sunday, January 5, 2020

பாம்பே வெல்வேட் 16: ரசிகையர் துரத்திய சூப்பர் ஸ்டார்! 



எஸ்.எஸ்.லெனின்

“படப்பிடிப்பு முடிந்து மதராஸின் தங்கும் விடுதிக்குத் திரும்பியபோது நள்ளிரவாகிவிட்டது. அந்தப் பனியிலும் விடுதிக்குள் நுழைய வழியின்றி இளம் பெண்கள் திரண்டிருந்தனர். ராஜேஷ் கன்னாவைப் பார்த்ததும் உற்சாகமாகக் குரல் எழுப்பினார்கள். அவரைத் தொட்டுப் பார்க்க முண்டியடித்தார்கள்.

அந்த ரசிகைகளிடமிருந்து அவரைக் காப்பாற்றிக் கடப்பதற்குள் எல்லோரும் திணறிப்போனோம்” ராஜேஷ் கன்னா குறித்த எழுபதுகளின் சென்னை சம்பவத்தை இப்படி வர்ணித்தவர், எட்டுத் திரைப்படங்களில் அவருடன் ஜோடி சேர்ந்த நடிகை மும்தாஜ்.

அந்த அளவுக்கு ரசிகையரின் அன்புத் தொல்லைகளுக்கு ஆளானார் ராஜேஷ் கன்னா. இதனால் பொது இடங்களில் நடமாட காவல்துறையிடம் பாதுகாப்பு கோரிய முதல் நடிகரானார். ரத்தத்தில் எழுதிய கடிதங்கள், ஒளிப்படத்தை ‘மணந்துகொண்டு’ வாழும் பெண்கள் என விநோத செய்திகள் அடிக்கடி வெளியாகும் அளவுக்குமீறி ரசிகப் பித்தேறிய பெண்கள் ராஜேஷ் கன்னாவின் திரை வெற்றிகளுக்குக் காரணமானார்கள்.

முதல் இந்திய சூப்பர் ஸ்டார்

இந்தி சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக கே.எல்.சைகல் என்ற முப்பதுகளின் பிரபலமான பாடக நடிகரைக் குறிப்பிடுவார்கள். அவர் காலத்துக்குப் பிந்தைய சினிமா விமர்சகர்கள் வழங்கிய அங்கீகாரம் என்பதால், அதனை சைகல் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தனது வாழ்நாளிலே ஒரு சூப்பர் ஸ்டாருக்கான சகல அடையாளங்களுடன் வளைய வந்த முதல் இந்திய நடிகர் ராஜேஷ் கன்னா! பிராந்திய மொழிகள் பலவற்றிலும் சமகாலத்து சூப்பர் நடிகர்கள் பலர் உருவானபோதும், ராஜேஷ் கன்னா அளவுக்கு தேசம் நெடுக அபிமானம் பெற்ற நடிகர் எவருமில்லை. மொழி புரியாதபோதும் அவர் ரசிகர்களைக் கிறங்கடித்தார். படுசோபையான திரைக்கதைகளும் ராஜேஷ் கன்னாவுக்காகவே வெற்றிபெற்றன. இந்திக்கு அப்பாலும் இப்படி இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் ஆனார் ராஜேஷ் கன்னா.

முதல் படமே ஆஸ்கர் தடம்

அமிர்தசரஸில் பிறந்த ‘ஜதின் கன்னா’ சிறு வயதிலேயே செழிப்பான குடும்பம் ஒன்றுக்குத் தத்து கொடுக்கப்பட்டார். பள்ளி, கல்லூரிக் காலத்தில் மேடை நாடகப் போட்டிகளில் வரிசையாய் வாகை சூடினார். நண்பர்களின் வற்புறுத்தலுக்காக ‘திரைக்கான தனித் திறமையாளர்களை அடையாளம் காணும் அகில இந்தியப் போட்டி (1965)’ ஒன்றில் பத்தாயிரம் பங்கேற்பாளர்களில் ஒருவராகக் கலந்துகொண்டார்.

வெற்றி பெற்றவருக்கு அந்தப் போட்டியின் நடுவர்களாக இருந்த இயக்குநர்களே வரிசையாக வாய்ப்பளிக்க, ஜதின் கன்னா ‘ராஜேஷ் கன்னா’வாகத் திரையில் உதயமானார். அறிமுகமான ‘ஆக்ரி கத்’ (1966) சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்துக்கான திரைப்படப் பிரிவில் ஆஸ்கருக்கான இந்தியப் பரிந்துரையானது. ஆனால், அது உட்பட அடுத்து வெளியான ராஜேஷ் கன்னாவின் பல திரைப்படங்கள் வெற்றியை ருசிக்கவில்லை. ஆனபோதும் அவரது பிரத்யேக வசீகரம் பட வாய்ப்புகளுக்குக் குறைவில்லாது செய்தது.



ஆராதனையின் தொடக்கம்

மூன்று சத்யஜித் ரே படங்கள், பல்வேறு பாலிவுட் பட வெற்றிகள் என 25 வயதில் முன்னணி நடிகையாக இருந்தார் ஷர்மிளா தாகூர். நடிப்புத் திறன் மட்டுமன்றி, அறுபதுகளில் ஒரு பாடல் முழுக்க நீச்சலுடையில் நடிக்கத் துணிந்ததில் இளைய வயதினரையும் கவர்ந்திருந்தார். அவரது நடிப்பில் வெற்றிக் காவியமான ‘ஆராதனா’ (1969), பெண்ணின் போராட்ட வாழ்க்கையைப் பேசிய வகையிலும், ஐயமின்றி அது ஷர்மிளா தாகூரின் திரைப்படமாகவே கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்போது வளர்ந்து வந்த ராஜேஷ் கன்னாவின் திரை வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட படமானது.

‘ஆராதனா’வில் இருவேடங்களில் தோன்றி ரசிகைகளின் மனத்தில் வலதுகால் வைத்தார் ராஜேஷ் கன்னா. ‘டு ஈச் ஹிஸ் ஓன்’ (To each his own) என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பதால், கதை இந்திய மண்ணுக்குப் புதிதாக இருந்தது. திருமணத்துக்கு முந்தைய உறவு, மணமாகாது தாயான இளம்பெண் என அக்காலத்தின் சர்ச்சைக்குரிய அம்சங்களைக் கதை கொண்டிருந்தும், ராஜேஷ் கன்னா என்ற ஒரே வசீகரம் அனைத்தையும் பின் தள்ளிய அதிசயம் நிகழ்த்தியது. ராஜேஷ் கன்னா தோன்றும் ‘ஆராதனா’ பாடல் காட்சிகள் இன்றைக்கும் பிரபலத்தன்மை குறையாதிருக்கின்றன.

‘ஆராதனா’ பணிகளின்போது இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மன் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். தந்தையின் இசைக் கற்பனைக்கு மகன் ஆர்.டி.பர்மன் புதுமையாய் வடிவம் தந்தார். ‘மேரே சப்னோ கி ராணி..’, ’ரூப் தேரா மஸ்தானா..’ என ‘ஆராதனா’ பாடல்கள் அனைத்தும் ராஜேஷ் கன்னா என்ற புதிய திரைக் கடவுளுக்கு அதன்பின் ஆராதனைப் பாடல்கள் ஆயின.

ராஜேஷ் கன்னாவின் பாணி

சக பாலிவுட் நடிகர்களைப் பதறடிக்கும் அளவுக்கு ‘ஆராதனா’வில் தொடங்கி அடுத்த, மூன்று ஆண்டுகளில் 15 வெற்றிப் படங்களைத் தந்தார் ராஜேஷ் கன்னா. இவர், நாடு முழுவதும் பரவலான ரசிகர்களை ஈர்க்க அவரது வசீகரமே முதன்மைக் காரணமாக இருந்தது. அதற்கு அப்பால் ராஜேஷ் கன்னாவின் தனித் திறமைகளைத் திரையில் தேடினால் ஏமாற்றமே மிஞ்சும். அவரது அட்டகாச நடிப்பைப் பாடல் காட்சிகளில் மட்டுமே தரிசிக்கலாம். இசைக்கேற்ப, பாடலின் லயத்துக்கேற்பத் தலையசைத்து, கண் சிமிட்டி, கிஷோர் குமாரின் பின்னணிக் குரலுக்குப் பொருத்தமாய் வாயசைத்தே ரசிகர்களைக் கரைத்துவிடுவார்.

மற்றபடி ராஜேஷ் கன்னாவுக்கு நடனமும் தோதுப்படாது. தலையசைப்பு, கண்சிமிட்டல் பாணியில் பாந்தமான உடலமைப்புகளை மட்டுமே வெளிப்படுத்திச் சமாளிப்பார். பிற்பாடு அதுவே ராஜேஷ்கன்னா பாணி நடனமாகவும் புகழடைந்தது. ‘ஹாதி மேரே ஸாதி’ படம் அதுவரையிலான வசூல் சாதனைகளை உடைத்தது. தொடர்ந்து ‘கதி பட்நாக், ஆனந்த், அமர் பிரேம், டாக், ஆப் கி கசம்’ என எழுபதுகளின் மிகப் பெரும் வெற்றிப்படங்கள் வெளியாயின. அடுத்த திரைப்படம் பொன்விழாவா, வெள்ளி விழாவா என்பதே பேச்சாக இருந்தது.



சரிந்த தர்பார்

புகழேணியின் உச்சியில் சறுக்கவும் செய்தார் ராஜேஷ் கன்னா. திரைப்படங்களின் வெற்றி வரிசை அவரை நிதானமிழக்கச் செய்தது. படப்பிடிப்புத் தளங்களில் ராஜேஷ் கன்னாவின் தனி தர்பார் அப்போது ஏகப் பிரபலம். உயர சிம்மாசனத்தில் அவர் வீற்றிருக்க, பரிசில் புலவர்களைப் போலத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் முறைவாசலுக்குக் காத்திருப்பார்கள். சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரது பணிகளில் மூக்கை நுழைப்பதுடன், படப்பிடிப்பு தொடங்கியதும் தாமதமாக வருவது, வராது தவிக்கவிடுவது என அலைக்கழிக்கத் தொடங்கினார்.

தன்னுடன் இரண்டாம் கதாநாயகனாகத் தோன்றும் அமிதாப் பச்சன் போன்றோருக்கு இடைஞ்சல்கள் தருவது, துதிபாடிகளை மட்டுமே நம்புவது என மாய உலகிலும் சஞ்சரித்தார். திரையுலகின் மாற்றங்களை உள்வாங்கத் தவறியதில் அவரது இடத்தை அமிதாப் பச்சன் போன்ற துடிப்பான இளைஞர்கள் ஆக்கிரமித்தனர். ஆனபோதும் எண்பதுகள் வரை ராஜேஷ் கன்னா திரைப்படங்களுக்கு அந்தத் தலைமுறை ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்தது. தலைமுறை மாற்றம் நேர்ந்த பிறகே ராஜேஷ் கன்னாவுக்கான அலை ஓய்ந்தது.

ராஜேஷ் கன்னாவின் வெற்றிப் பட வரிசையில் முக்கியமானது ‘ஆனந்த்’. புற்றுநோய் பீடித்தவர்கள் இறப்புக்கு ஆளாகும் துயரத்தை நாட்டுக்குச் சொன்ன திரைப்படம் அது. ராஜேஷ் கன்னாவின் கதாபாத்திரம் மரித்தால் திரைப்படம் வெள்ளிவிழா காணும் என்ற நம்பிக்கை அப்போது நிலவியதில் ‘ஆனந்த்’ பாணியில் பலவிதமாய் ராஜேஷ் கன்னாவைத் திரையில் சாகடித்தார்கள்.

துரதிருஷ்டமாகராஜேஷ் கன்னாவின் கடைசிக் காலமும் ‘ஆனந்த்’ பாணியில், நீண்ட புற்றுநோய்ப் போராட்டமாக முடிந்தது. 16 வயது டிம்பிள் கபாடியாவை 31 வயது ரஜேஷ் கன்னா மணந்ததில், டிவிங்கிள், ரிங்கி என இரு மகள்களுடன் பத்தாண்டு மட்டுமே அந்த இல்லற வாழ்க்கை நீடித்தது. திருமணத்துக்கு அப்பால் சக நடிகையர் மட்டுமன்றி கடல் தாண்டியும் ராஜேஷ் கன்னாவுடன் பெண்கள் நெருக்கம் பாராட்டினார்கள். அவர் கட்டிக்காத்த ஸ்டார் பிம்பத்துக்கு இந்த நெருக்கமும் ஒருவகையில் காரணமானது.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
ஆசனவாய் நோய்கள் அலட்சியம் வேண்டாம்!

By டாக்டர் வெங்கடாசலம் | Published on : 06th March 2017 12:44 PM





முக அழகிற்கும், முடி அலங்காரத்திற்கும் தினமும் கவனம் செலுத்துபவர்கள் ஆசனவாய் சார்ந்த நோய்களான மலச்சிக்கல், மூலம், பவுத்திரம், சதைகள், கட்டிகள், வெடிப்புகள் ரத்தப்போக்கு ஆகியவை குறித்து அக்கறை செலுத்துவதில்லை. காரணம் கூச்சத்தினாலும், அச்சத்தினாலும் ஏற்படும் தயக்கம். ‘அறுவை சிகிச்சை அவசியம்’ என்று மருத்துவர்கள் சொல்லி விடுவார்களோ என்றுபயத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டே போய், நோயை முற்றிய நிலைச் சிக்கலாக வளர்த்து விடுகிறார்கள். ஆசனவாய் நோய்களுக்கான ஆரம்ப அறிகுறீகள் தெரிந்தவுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நலமாக்கல் எளிது.

ஆசனவாயும், மலக்குடலும் இருபுட்டங்களுக்கு நடுவில், பாலுறுப்புகளுக்கு அருகாமையில் மறைவாக அமைந்துள்ளன. சுற்றியுள்ள கொழுப்பு திசுக்களால் ஆசனவாய் பாதுகாப்பாக உள்ளது. மலமும் வாயுவும் வெளியேறும் போது மட்டும் விரிந்து மற்ற நேரங்களில் இறுக்கமாகச் சுருங்கியிருக்கும் தன்மையுள்ள சுருங்கு தசைகள் (sphincters) இங்கு உள்ளன. ஆசனவாயில் நடைபெறும் ஆபரேஷன்களை எளிய, சிறிய (Minor Surgeris) ஆபரேஷன்கள் என்றே ஆங்கில மருத்துவம் கூறுகிறது. ஆயினும் மைனர் ஆபரேஷனுக்குப் பின் பேரிய பின் விளைவுகள் (Major side effects) ஏற்படுவதை முதலில் கூறுவதில்லை.

ஆபரேஷனுக்குப் பின்பு ஆசனவாய் சுருங்குதசைகள் (Sphincter Muscles) பாதிக்கப்பட்டு மலத்தை அடக்கிக் கொள்ளும் தன்மையை இழந்துவிடுகிறது (Incontinence). சிலருக்கு மலக்குடல் அடைப்பு (Stricture) ஏற்பட்டு விடுகிறது.

மூலம் (Piles), பவுத்திரம் (Fistula in Ano), பவுத்திர சீழ்க்கட்டி (Perianal Abscess), பிளவுப் புண் (Fissure in Ano), ஆசனவாய் நமைச்சல் அரிப்பு (Anal Pruritus), தொங்குசதைக் கட்டி (Anal Polyp), மலக்குடல் & ஆசனவாய் பிதுக்கம் (Anal & Rector Prolapse), ரத்தப்போக்கு போன்றவை ஆசனவாய் சார்ந்த பொதுவான நோய்களாகும். ஆயினும் இவற்றில் எந்த நோய் ஏற்பட்டாலும் ‘எனக்கு பைல்ஸ் உள்ளது’ என்று தான் பலரும் மருத்துவர்களிடம் தெரிவிப்பதுண்டு. தீர விசாரித்தும், உடற்பரிசோதனை செய்தும், தேவையெனில் ஆய்வுக் கூட பரிசோதனைகளுக்கு உட்படுத்தியும் நோயையும், நோய் நிலையையும் மருத்துவர்கள் கண்டறிந்து உறுதி செய்த பின்னரே சிகிச்சை அளிக்கின்றனர்.

‘மூலம்’ என்ற நோய் தவிர்த்து பிற முக்கிய ஆசனவாய் நோய்களையும் அவற்றை நலமாக்கப் பயன்படும் ஹோமியோபதி மருந்துகள் பற்றியும் பார்ப்போம். (மூலம் தனி கட்டுரையாக விரிவாக எழுதப்பட வேண்டிய ஒன்று).

ஆசனவாய் பிளவுகள் (fissures in Ano) : மலங்கழித்தல் என்பது இயல்பான, சிரமமற்ற உடலியல் நிகழ்வாக நடைபெற வேண்டும். மாறாக மிகக் கடினமான, வேதனை மிக்க நிலை மலங்கழிக்கும் போது ஏற்பட்டால் ஆசனவாய் பகுதி காயம்பட்டு விடும். மலச்சிக்கல் பேர்வழிகளுக்கு மலப்பாதை வழியே மிகக் கடினமான இறுக்கமான மலம் சிரமப்பட்டு வெளியேறுவதன் விளைவே ஆசனவாய் பிளவுப் புண்கள் (Cracks). இது ஆசனவாய் கிழிந்து விடும் நிலையாகும் (Tear in Anus). பிறப்புறுப்பு வழியே பிரவசிக்கும் (Vaginal Delivery) பெண்களுக்கும் ஆசனவாயில் ஏற்படும் அழுத்தங்களால் பிளவுப் புண்கள் ஏற்படக் கூடும்.

ஆசனவாய்ப் பிளவுப் புண்கள் இருப்பதற்கான முக்கிய அறிகுறி

மலங்கழிக்கும் போதும், சிலருக்கு மலம் கழித்த பின்னரும் ஆசனவாயில் கடும்வலி ஏற்படும். இந்நோயைப் பலரும் மூலம் (Piles) என்றே கருதி சிகிச்சைக்கு வருவதுண்டு. இந்நோய் தீவிர (acute) வலியுள்ள வகை. நாள்பட்ட (acute) வலியுள்ள வகை எனப் பிரிக்கப்படுகிறது. நாள்பட்ட வகையில், ஆசனவாயில் முக்கோண வடிவமுள்ள தோல் தொங்கும். இதை Sentinal Pile என்று அழைத்த போதிலும் இது மூல நோய் அல்ல.

தீவிர மற்றும் நாள்பட்ட ஆசனவாய் பிளவுப் புண்களுக்கு ஆபரேஷன் இன்றி, பக்க விளைவுகள் இன்றி ஹோமியோபதி மருந்துகள் எளிய முறையில் தீர்வு தருகின்றன. ஹோமியோபதி மருந்துகள் மனித உடலின் சீர்குலைந்த இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. கடுகளவு தீங்கு கூட ஏற்படுவதில்லை. மிகவும் பாதுகாப்பானவை.

நைட்ரிக் ஆசிட் (Nitric Acid) என்ற ஹோமியோபதி மருந்து ஆசனவாய் பிளவுப் புண்களுக்கு ஆபரேஷனின்றி, பக்க விளைவுகளின்றி ஹோமியோபதி மருந்துகள் எளிய முறையில் தீர்வு தருகின்றன. ஹோமியோபதி மருந்துகள் மனித உடலின் சீர்குலைந்த இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. கடுகளவு தீங்கு கூட ஏற்படுவதில்லை, மிகவும் பாதுகாப்பானவை.

நைட்டிரிக் ஆசிட் (Nitric Acid) என்ற ஹோமியோஒபதி மருந்து ஆசனவாய் பிளவுப் புண்களுக்கு அற்புத நலமளிக்கும் திறன் கொண்டது. ஆசனவாயில் கிழிபடுகிற, குத்துகிற, கொட்டுவது போன்ற, வெட்டுவது போன்ற வலி ஆசனவாயில் ஏற்படுமாயின் இம்மருந்து பேருதவி புரிவது திண்ணம். மேலும் கடினமலம், மலத்துடன் ரத்தப்போக்கு போன்ற பிரச்னைகளுக்கும் உடனடித் தீர்வு கிட்டும்.

ரட்டானியா (Ratanhia) என்ற ஹோமியோ மருந்தும் ஆசனவாய் பிளவு நோயில் சிறந்த நிவாரணமளிக்கக் கூடியதாக திகழ்கிறது. மலம் கழித்த பின் மலப்பாதையில் & ஆசனவாயில் அதிகளவு எரிச்சல் உணர்வும் நீண்ட நேரம் நீடிக்கக் கூடிய வலியும் காணப்படும். ஆசனவாய் வாய் வழியாக மலக்குடலுக்குள் ஒரு கத்தியையோ, உடைந்த கண்ணாடித் துண்டையோ கொண்டு செருகியது போல் வலிப்பதாக நோயாளி விவரிப்பார். ஆசனவாய் மிகவும் இறுகிவிட்டது போல (Constricted) இளகிய மலத்தைக் கூட மிகவும் சிரமப்பட்டு வெளியேற்றும் நிலை ஏற்படும். இத்தகைய நிலையில் ரட்டானியா அற்புதங்கள் நிகழ்த்தும் என்பதை ஒவ்வொரு ஹோமியோபதி மருத்துவரும் அறிவார்கள்.

இவ்விரண்டு மருந்துகள் தவிர சல்பர், பேயோனியா, கிராபைட்டீஸ், தூஜா, இக்னேஷியா, Sedun Acre போன்ற சில மருந்துகளும் ஆசனவாய் பிளவுப் புண்களை முழுமையாகக் குணப்படுத்தும் முன்னணி மருந்துகளாகத் திகழ்கின்றன.

ஆசனவாய் அரிப்பு, நமைச்சல் (PRURITUS ANO) : ஆசனவாயைச் சுற்றித் தாங்க முடியாத அரிப்பு (Itching) ஏற்படுவதை தான் PRURITUS ANO என்கிறோம். பொது இடத்தில் இருக்கும் போது கூட ஒரு நபர் ஆசனவாயில் கை வைத்து தேய்த்துக் கொள்ளும் அளவுக்கு அரிப்பு இருக்கும். இதைக் காணும் பிறருக்கு அருவருப்பாக இருக்கும். ஆசனவாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கும், குடற்பூச்சிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தான் இத்தகைய ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. வயிற்றுப் பூச்சிகளால் பெரும்பாலும் குழந்தைகள் தான் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சல்பர், நைட்ரிக் ஆசிட், காஸ்டிகம், லைகோ, சபடில்லா போன்ற ஹோமியோபதி மருந்துகள் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகின்றன.

தொங்குசதை (POLYP) : மலக்குடலினுள்ளும் சில சமயம் ஆசனவாயின் வெளியேயும் தெரியும் தொங்குசதை POLYP எனப்படுகிறது. சிவப்பான ரத்தம் கசியும் சதை இது. ஆங்கில மருத்துவத்தில் இதனை POLYPECTOMY எனும் சிகிச்சை மூலம் அகற்றுகின்றனர். சிலருக்கு ஒன்றுக்கு மேல் இச்சதை இருந்தால் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இச்சதையை அறுவைச் சிகிச்சையின்றி குணமாக்க உதவும் சில முக்கிய ஹோமியோ மருந்துகள் : டுக்ரியம், பாஸ்பரஸ், தூஜா, காலிபுரோம்.

மலக்குடல் பிதுக்கம் (PROLAPSE RECTUM) : மலம் கழிக்கும் போது, மலக்குடல் முழுவதும் ஆசனவாய் வழியாக வெளியே தள்ளப்பட்டு பிதுங்கித் தொங்கும். இந்தச் சதை 3 அல்லது 4 அங்கும் நீளத்திற்குத் தொங்கும். இச்சதை பார்ப்பதற்கு அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தும். சிறு குழந்தைகளும், முதியவர்களும் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள். சிறுவயதில் வரும் இந்நோய் தானாகவே குணமாவதுண்டு. பெரியவர்களுக்கு வந்தால் மலக்குடலை உள்ளே தள்ளி நிலைநிறுத்தும் RECTOPEXY அறுவைச் சிகிச்சை ஆங்கில மருத்துவத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ஹோமியோபதியில் அறுவைச் சிகிச்சை தேவையில்லை ஆலோ, இக்னேசியா, மூரியாடிக் ஆசிட், போடோ பைலம், ரூடா, அபிஸ், கல்கேரியா கார்ப், சிலிகா, செபியா, மெர்க்சால் போன்ற ஹோமியோபதி மருந்துகள் மலக்குடல் இறக்கத்திற்கு முழு நிவாரணம் அளிக்கின்றன. கர்ப்பகாலத்தில் ஏற்படும் மலக்குடல் இறக்கத்திற்கு போடோபைலம், ரூடா ஆகிய இருமருந்துகள் அற்புதமாக பயன் தருகின்றன.

ஆசனவாய் நோய்களுக்கு ஹோமியோபதி மற்றும் இந்திய மருத்துவங்களில் மிகச் சிறந்த தீர்வுகள் கிடைக்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ரத்தப்போக்கை உடனடியாக கட்டுப்படுத்த, கடுமையான வலியிலிருந்து விரைவாக நிவாரணம் கிடைக்க, பின் விளைவுகள் நிறைந்த அறுவைச் சிகிச்சைகளைத் தவிர்க்க ஹோமியோபதி உள்ளிட்ட மாற்றுமருத்துவங்களே மிகவும் சிறந்தவை.

Dr.S. வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்

Cell : 9443145700

Mail : alltmed@gmail.com
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்லி விழுந்த பாலை குடித்த தாய், மகள் மயக்கம்: உணவுப் பாதுகாப்புத் துறையினா் விசாரணை

By DIN | Published on : 04th January 2020 10:45 PM 

பால் வாங்கிய நெகிழிப் பையில் இறந்து கிடந்த பல்லி.

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பாலகத்தில் வாங்கிய பாலில் பல்லி விழுந்து கிடந்ததை அறியாமல் குடித்த தாய், மகள் மயக்கமடைந்தனா். இதுதொடா்பாக பாலகத்தின் உரிமையாளரிடம் உணவுப் பாதுகாப்புத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள நல்முக்கல் கீழ்சிவிரி கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி மனைவி துா்காதேவி (25). இவரது மகள் ஹரிணி (2). குடும்ப நல அறுவைச் சிகிச்சைக்காக துா்காதேவி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா்.

துா்காதேவியை அவரது தாய் பரமேஸ்வரி (42) உடனிருந்து கவனித்து வருகிறாா்.

வெள்ளிக்கிழமை இரவு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தனியாரால் நடத்தப்படும் ஆவின் பாலகத்துக்குச் சென்று பரமேஸ்வரி பால் வாங்கினாா். அங்கு நெகிழிப் பையில் ஊற்றிக் கொடுத்த பாலை வாங்கிக்கொண்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகள் துா்காதேவிக்கும், உடனிருந்த பேத்தி ஹரிணிக்கும் டம்ளரில் ஊற்றி கொடுத்தாா்.

இருவரும் குடித்த பிறகு, நெகிழிப் பையில் எஞ்சியிருந்த பாலை, பரமேஸ்வரி குடிக்க முயன்றாா். அப்போது, நெகிழிப் பையில் பல்லி இறந்து கிடந்தது கண்டு பரமேஸ்வரி அதிா்ச்சியடைந்தாா். இதனிடையே, பல்லி விழுந்த பாலை குடித்த துா்காதேவி, ஹரிணி இருவரும் மயக்கமடைந்தனா். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அறிந்த மருத்துவா்கள் விரைந்து வந்து, மயங்கி விழுந்த தாய், மகள் இருவருக்கும் தீவிர சிகிச்சையளித்தனா்.

இந்த சம்பவம் குறித்து பரமேஸ்வரி அளித்த புகாரின் பேரில், சனிக்கிழமை காலை, மருத்துவக் கல்லூரி நிலைய மருத்துவ அலுவலா் கதிா் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா், அந்த பாலகத்துக்குச் சென்று அதன் உரிமையாளரிடம் விசாரித்தனா். உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் வேணுகோபால் தலைமையிலான குழுவினரும் நேரில் வந்து ஆய்வு செய்தனா்.

மேலும், பால் மாதிரியை எடுத்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள், அந்த கடைக்காரரை எச்சரித்ததுடன் கடையை சுகாதாரமாகப் பராமரிக்கவும், நெகிழிப் பையை பயன்படுத்தக் கூடாதெனவும் அறிவுறுத்திச் சென்றனா். பாலில் பல்லி விழுந்தது தொடா்பாக, உணவுப் பாதுகாப்புத் துறையினரும், விக்கிரவாண்டி காவல் நிலையத்தினருரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நீட் தேர்வு: உச்சநீதிமன்றத்தில் தமிழகம் புதிய மனு

By நமது நிருபர் | Published on : 05th January 2020 03:24 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு "ரிட்' மனுவை சனிக்கிழமை தாக்கல் செய்தது.

நீட் தேர்வை கட்டாயமாக்கி, கடந்த 2017 மற்றும் 2018-இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக இந்த மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்டிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் அரசாணையை மத்திய அரசு 2016-இல் பிறப்பித்தது.

எனினும், தமிழகத்துக்கு அந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்க்கப்படுகின்றனர்.

நிகழாண்டுக்கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நடை   முறைகள் டங்கப்பட்டுள்ளன. இதற்கான கடைசி தேதி ஜனவரி 6 ஆகும்.இந்நிலையில், நீட் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை தமிழக சுகாதாரத் துறை சார்பில் புதிதாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017 மற்றும் 2018-இல் கொண்டுவரப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் சட்டத் திருத்தத்துக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு, மத்திய சுகாதார- குடும்ப நல அமைச்சகம், இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் உள்ளிட்டவை பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் மனுவில், "நீட் தேர்வை கட்டாயமாக்கும் வகையில், இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் சட்டங்களில் முறையே 2017, 2018-ஆம் ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மாநிலத்தின் உரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது. சமூகத்துக்கு மாநில அரசு செய்யும் கடமைகளைத் தடுக்கும் வகையில் உள்ளது. கிராமப்புற மாணவர்கள் பள்ளித் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற நிலையிலும் நீட் தேர்வு காரணமாக அவர்களால் மருத்துவ சேர்க்கை பெற முடியவில்லை. இதனால், மருத்துவக் கல்லூரிகளில் சேரும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அரசியல் அமைப்புச்சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. ஆகவே, அந்த திருத்தங்களைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பனி மூட்டத்தால் விமானம் இறங்குவதில் சிக்கல்

Added : ஜன 04, 2020 21:51

சென்னை: சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவியதால், 168 பயணியருடன் வந்த விமானம், திருச்சியில் தரையிறங்கியது.ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றான, மடகாஸ்காவில் இருந்து புறப்பட்ட, 'ஏர் ஆஸ்ட்ரல்' விமானம், நேற்று அதிகாலையில், 168 பயணியருடன், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றது.சென்னையில், கடும் பனிமூட்டம் நிலவியதால், அந்த விமானம் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

அதனால், விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமானிகளுடன் தொடர்பு கொண்டு, கடும் பனிமூட்டமாக இருப்பதால், திருச்சி விமான நிலையத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்திஉள்ளனர்.இதையடுத்து, அந்த விமானம், நேற்று காலை, 6:53 மணிக்கு, திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.சென்னையில் பனிமூட்டம் விலகியதாக தகவல் கிடைத்தபின், காலை, 9:20 மணிக்கு, பயணியருடன் விமானம், சென்னைக்கு புறப்பட்டு வந்
மனநல வகுப்பில் மாணவர் சேர்க்கை அரசுக்கு ஐகோர்ட், 'நோட்டீஸ்'

Added : ஜன 04, 2020 23:41

சென்னை: அரசு மருத்துவ கல்லுாரி களில், மனநல மற்றும் உளவியல் வகுப்புகளில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கறிஞர் ரங்கநாயகி, தாக்கல் செய்த மனு:தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில், ஒரு லட்சம் பேருக்கு, ஒருவர் வீதம், மனநல சிகிச்சை நிபுணர் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மனநல துறையில், நிபுணர்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளது. இந்த துறையில், அதிக நிபுணர்கள் தேவைப்படுகின்றனர்.மருத்துவ கல்லுாரிகளில், மனநல கல்வியில் போதிய இடங்கள் இல்லை. குறைந்த எண்ணிக்கையில் தான், மாணவர்களை சேர்க்கின்றனர். சென்னை மருத்துவ கல்லுாரி தவிர்த்து, மற்ற கல்லுாரிகளில், இரண்டு முதல் நான்கு என்ற அளவில் தான் மாணவர்களை சேர்க்கின்றனர். சில மருத்துவ கல்லுாரிகளில், இந்தப் பாடமே இல்லை.மன அழுத்தம், மன உளைச்சலால், தற்கொலை செய்து கொள்ளும் போக்கு உள்ளது. குழந்தைகள், இளைஞர்களுக்கு, மனநல ஆரோக்கியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி பாடத்திட்டத்தில், யோகா சேர்க்கப்பட வேண்டும். அனைத்து அரசு மருத்துவ கல்லுாரிகளிலும், மனநல மற்றும் உளவியல் வகுப்புகளில், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது

.மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, பிப்., ௨௬க்கு தள்ளி வைத்தனர்.
பிரசவத்தில் தாய், குழந்தை பலி அரசு டாக்டர் 'சஸ்பெண்ட்'

Added : ஜன 05, 2020 00:09

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய், குழந்தை பலியான சம்பவத்தில் பெண் டாக்டர் மணிமொழி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடையை சேர்ந்தவர் முருகேசன். வெளி நாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி கீர்த்திகா 22. இவர் டிச.27 இரவு பிரசவத்திற்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 10:00 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் குழந்தை இறந்தது. அதன் பின், சில மணி நேரத்தில் கீர்த்திகாவும் இறந்தார்.கீர்த்திகாவின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து மருத்துவக்கல்லுாரி டீன் அல்லி, சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் வெங்கடாச்சலம் ஆகியோர் விசாரித்தனர். இதையடுத்து அப்போது பணியில் இருந்த டாக்டர் மணிமொழி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

NEWS TODAY 25.01.2026