Wednesday, August 24, 2016

தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்த்தால் 3 ஆண்டு சிறை தண்டனை

டொரண்ட் போன்ற தடை செய்யப் பட்ட இணையதளங்களைப் பார்த் தால் 3 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஆபாச இணையதளங்களைத் தடை செய்வது குறித்து ஆலோசித்து வந்த மத்திய அரசு தற்போது டொரண்ட் போன்ற இணையதளங் களையும் முடக்க பரிசீலித்து வரு கிறது. இந்நிலையில் படைப்பாளி களைப் பாதிக்கும் டொரண்ட் போன்ற தடை செய்யப்பட்ட இணையதளங்களைப் பார்ப்ப வருக்கு 1957-ம் ஆண்டில் இயற்றப் பட்ட இந்திய காப்புரிமை சட்டத் தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண் டனையும், ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதிக்கலாம் என தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட இணையதளங்களுக்குள் செல் வதற்கு முன்னர் அது குறித்து எச்சரிக்கையும் வழங்கப்படும். அதை மீறி உள்ளே சென்று தகவல் களைப் பகிர்ந்து கொள்வது, தர விறக்கம் செய்வது, பார்ப்பது, இணையத்தில் பதிவிடுவது இந்திய காப்புரிமை சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படும் என்றும் தொலைதொடர்பு துறை தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court Prana...