Thursday, August 3, 2017

ஊருக்குள் வரமறுத்த தனியார் பஸ்: கண்டக்டருக்கு அடி

பதிவு செய்த நாள் 02 ஆக
2017
23:22
dinamalar


ஸ்ரீவில்லிபுத்துார், ஊருக்குள் வராமல் மறுத்து, பயணிகளை ஏற்ற மறுத்த தனியார் பஸ் கண்டக்டரை தாக்கிய கிராமத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கன்றனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் அழகாபுரியை சேர்ந்தவர் செல்வராஜ். நேற்று முன்தினம் மதுரை ரிங்ரோட்டில் இருந்து ராஜபாளையம் செல்லும் தனியார் பஸ்சில் அழகாபுரிக்கு வருவதற்கு, கண்டக்டர் காளமேகபெருமாள் மறுத்துள்ளார். பஸ் அழகாபுரி அருகே வரும்போது, கிராமத்தை சேர்ந்தவர்கள் மறித்து, அழகாபுரிக்குள் வரமறுப்பது ஏன் எனக்கேட்டு கண்டக்டரை தாககினர்.
கண்டக்டரின் புகாரில், அழகாபுரியை சேர்ந்த செல்வராஜ், முத்துபாண்டி, சிவலிங்கம், மாரிசெல்வம், கருப்பசாமி ஆகியோர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, எஸ்.ஐ.,காளைமுத்தையா விசாரித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.12.2025