Thursday, August 3, 2017

பல்லாவரத்தில் 100 சதவீதம் கழிப்பறை பயன்பாடு

பதிவு செய்த நாள் 02 ஆக
2017
22:00

பல்லாவரம் : சென்னை, பல்லாவரம் நகராட்சியில் உள்ள, 42 வார்டுகளிலும், பொதுமக்கள், 100 சதவீதம் கழிப்பறையை பயன்படுத்துவதாக, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.பல்லாவரம் நகராட்சியில், 42 வார்டுகள் உள்ளன. திறந்தவெளி கழிப்பறையை தடுக்கும் வகையில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 1,689 தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.இதையடுத்து, முதல்கட்டமாக, 29 வார்டுகளில், 100 சதவீதம் கழிப்பறை பயன்பாடு உள்ளதாக, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. மற்ற, 13 வார்டுகளில், இதற்கான நடவடிக்கைகள்   கொள்ளப்பட்டன.மாணவர்களிடம், பள்ளி மற்றும் வீடுகளில் கழிப்பறையை தான் பயன்படுத்தி வருகிறோம் என, உறுதிமொழி கடிதங்கள் பெறப்பட்டன. மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் பொதுமக்களிடமும், உறுதிமொழி கடிதங்கள் பெறப்பட்டன. இந்த கடிதங்களுக்கு, நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது.இதையடுத்து, 42 வார்டுகளிலும், 100 சதவீதம் கழிப்பறை பயன்பாடு உள்ளதாக, அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.இது தொடர்பாக, பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால், commr.pallavapuram@tn.gov.in என்ற மின் அஞ்சல் மூலமாக, 15 நாட்களுக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
dinamalar

No comments:

Post a Comment

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 12.04.2025 மதுரை: பழிவாங்கும் ...