Tuesday, August 15, 2017


கோட்டையில் முதன்முறையாக கொடியேற்றுகிறார் பழனிசாமி

பதிவு செய்த நாள்15ஆக
2017
00:34


சுதந்திர தின விழாவை ஒட்டி, சென்னை, கோட்டை கொத் தளத்தில், இன்று முதன்முறையாக, முதல்வர் பழனிசாமி, தேசியக் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தின விழா அன்று, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடிக் கம்பத்தில், முதல்வர் தேசியக் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்பது வழக்கம். முதன்முறையாக, முதல்வராகியுள்ள பழனி சாமி, இன்று, கோட்டை கொத்தளத்தில், காலை, 8:30 மணிக்கு, தேசியக் கொடியேற்றி, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். அணிவகுப்பில், நல்லெண்ண அடிப்படையில், முதன்முறையாக, ஆந்திர போலீசார் பங்கேற்கின்றனர்.பின், முதல்வர் பழனி சாமி சிறப்புரையாற்றுவார். அப்போது, அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. வீர தீர செயல் புரிந்த பெண்களுக்கான, கல்பனா சாவ்லா விருது, சிறந்த விவசாயிகளுக்கான விருது உட்பட, பல்வேறு விருது களை, முதல்வர் வழங்குகிறார்.விழாவை ஒட்டி, கோட்டையை சுற்றி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோட்டை வளாகம், மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...