Sunday, August 27, 2017

நான்கு வழிச்சாலை பணிக்காக 150 ஆண்டுகள் பழமையான மரம் பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது



திருப்புவனத்தில் நான்கு வழிச்சாலை பணிக்காக 150 ஆண்டுகள் பழமையான மருத மரம் அப்படியே பிடுங்கி எந்திரங்கள் மூலம் வேறு இடத்தில் நடப்பட்டது.

ஆகஸ்ட் 27, 2017, 03:45 AM

திருப்புவனம்,

திருப்புவனத்தில் மதுரை–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையின் தெற்கு பகுதியில் 150 ஆண்டுகள் பழமையான மருத மரம் உள்ளது. இதன் அருகே மதுரை–ராமேசுவரம் ரெயில் தண்டவாளம் உள்ளது. இந்த மருத மரத்தின் அருகில் விவசாய நிலங்கள் உள்ளன. முன்பு திருப்புவனத்தில் இருந்து மதுரை செல்லும் அரசு டவுன் பஸ்களில் விவசாயிகள், அலுவலர்கள் மருத மர நிறுத்தத்தில் இறங்கி செல்வது வழக்கம். இதேபோல் பாதயாத்திரை செல்வோர் இந்த மருத மரத்தில் இளைப்பாறி செல்வார்கள். அந்த அளவிற்கு இந்த மரத்தின் கிளைகள் பறந்து விரிந்து காணப்படும். இதே மரத்தின் முன்புறம் மணிகள் கட்டி சாலையில் செல்வோர் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது மதுரை–ராமேசுவரம் நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. மருத மரத்தின் அருகே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிக்கு இடையூராக மருத மரம் இருந்ததால் அந்த மரத்தை எந்திரங்கள் மூலம் தூருடன் பிடுங்கி 300 அடி தூரத்தில் நடப்பட்டது.

திருப்புவனம் தாசில்தார் கமலா, இன்ஸ்பெக்டர் திருவானந்தம், நான்கு வழிச்சாலை திட்ட இயக்குனர் முத்துடையார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மரம் மாற்றப்பட்டது. முன்னதாக மானாமதுரையில் பஸ் போக்குரத்து திருப்புவனத்தில் இருந்து சக்குடி வழியாக இயக்கப்பட்டது.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...