Thursday, August 17, 2017

வெளிநாடு செல்வோருக்கு எச்சரிக்கை

பதிவு செய்த நாள்16ஆக
2017
22:33


சிவகங்கை, வேலைக்காக வெளிநாடு செல்வோர் போலி ஏஜன்ட்களை நம்பி ஏமாற வேண்டாம் என, தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது: வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்திடம் பதிவு பெற்ற ஏஜன்ட்கள் மூலமாகவே வெளிநாடு செல்ல வேண்டும். பதிவு பெறாத போலி ஏஜன்ட்களை நம்பி ஏமாற வேண்டாம். வெளிநபர்கள் கொடுக்கும் பார்சல்களை விமானத்தில் எடுத்துச் செல்ல வேண்டாம். எடுத்து செல்லும் பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள், மருந்து பொருட்கள் இருந்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும். வேலைக்கு
அவசியமான திறன் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும். வெளிநாடு சென்றதும் இந்திய துாதரகத்தை உடனடியாக அணுக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...