கம்பீரமாக காட்சியளிக்கும் ஆங்கிலேயர் கால 'மைல்' கல்
பதிவு செய்த நாள்19ஆக
2017
00:14

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி - முதுகுளத்துார் ரோட்டில் பேரையூர் பகுதியில் நிறைகுளத்து அய்யனார் கோயில் அருகே கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆங்கிலேயர் கால 'மைல்' கல்.
தமிழகத்தில் உள்ள கட்டுமானங்கள், ரயில் வழித்தடங்கள், முக்கிய சாலைகள் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல சாலைகள், கட்டுமானங்கள் இப்போதும்உறுதியோடும், பழமையை பறைசாற்றும் விதமாகவும் உள்ளது. தற்போது மைல்கற்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் கான்கிரீட்களால் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இவை குறுகிய காலத்திலேயே சேதமடைந்து விடுகின்றன.கமுதி - முதுகுளத்துார் சாலையில் பேரையூர் பகுதியில் ஆங்கிலேயர்களால் ௧௦௦ ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கருங்கல்லால் ஆன 'மைல்' கல், இப்போதும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. அதில் உள்ள தகவல்களும், மிகத் தெளிவாக தெரிகிறது.
பதிவு செய்த நாள்19ஆக
2017
00:14

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி - முதுகுளத்துார் ரோட்டில் பேரையூர் பகுதியில் நிறைகுளத்து அய்யனார் கோயில் அருகே கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆங்கிலேயர் கால 'மைல்' கல்.
தமிழகத்தில் உள்ள கட்டுமானங்கள், ரயில் வழித்தடங்கள், முக்கிய சாலைகள் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல சாலைகள், கட்டுமானங்கள் இப்போதும்உறுதியோடும், பழமையை பறைசாற்றும் விதமாகவும் உள்ளது. தற்போது மைல்கற்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் கான்கிரீட்களால் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இவை குறுகிய காலத்திலேயே சேதமடைந்து விடுகின்றன.கமுதி - முதுகுளத்துார் சாலையில் பேரையூர் பகுதியில் ஆங்கிலேயர்களால் ௧௦௦ ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கருங்கல்லால் ஆன 'மைல்' கல், இப்போதும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. அதில் உள்ள தகவல்களும், மிகத் தெளிவாக தெரிகிறது.
No comments:
Post a Comment