Monday, August 21, 2017

ரயில்வே ஸ்டேஷனை சுத்தப்படுத்திய மாணவர்கள்

பதிவு செய்த நாள்20ஆக
2017
23:02

விருதுநகர்:விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் சுத்தம், ரயில்வே நிலைய சுத்தம், ரயில்வே சுற்றுப்புற சுத்தத்தை வலியுறுத்தி ஆகஸ்ட் 16 முதல் 31 வரை துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியைச் சேர்ந்த 25 என்.சி.சி. மாணவர்களும், 25 என்.எஸ்.எஸ். மாணவர்களும் கலந்து கொண்டு ரயில்வே ஸ்டேஷனை சுத்தப்படுத்தினர். கல்லுாரி பேராசிரியர் அழகுமணி, ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் சிவகுருநாதன், முதன்மை சுகாதார இன்ஸ்பெக்டர் முருகன், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் வினோத்குமார், நேரு யுகேந்திரா திட்ட இயக்குனர் ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...