Monday, August 21, 2017

செல்போன் ரீசார்ஜ் செய்வதுபோல ஆந்திராவில் விரைவில் பிரீபெய்ட் மின்சாரம்: முதல்கட்டமாக அரசு அலுவலகங்களில் நடைமுறை

2017-08-21@ 00:42:13




திருமலை: செல்போன் ரீசார்ஜ் செய்வதுபோல ஆந்திர மாநிலத்தில் பிரீபெய்ட் மின்சாரம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அரசு அலுவலகங்களில் 

இது டைமுறைப்படுத்தப்படுகிறது.ஆந்திர மாநிலத்தில் மின்சாரத்துறை நிறுவனமான டிரான்ஸ்கோ செல்போன் ரீசார்ஜ் செய்வது போன்று மின்சார கட்டணத்தையும் ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை விரைவில் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது ஒவ்வொரு மாதமும் வீடு, கடை மற்றும் அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் மின்சார துறை ஊழியர்கள் மீட்டர் ரீடிங் செய்து வருகின்றனர். தொடர்ந்து பயன்படுத்திய மின் கட்டணத்திற்கு ரசீது வழங்கப்படுகிறது. இதற்குண்டான பில் தொகையை இ-சேவா மற்றும் ஆன்லைன் மூலமாக செலுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட தேதியில் பணம் கட்ட தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செல்போன் ரீசார்ஜ் செய்வது போன்று மின்சாரம் விநியோகத்திலும் பிரீபெய்ட் முறையை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மின் மீட்டர்கள் விரைவில் வாங்க திட்டமிட்டுள்ளனர். மேலும், எவ்வளவு மின்சாரம் தேவையோ அதற்கேற்ப பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
தொடர்ந்து இந்த திட்டத்தை முதல் கட்டமாக அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்த டிரான்ஸ்கோ திட்டமிட்டுள்ளது. இதில் அரசு துறை அலுவலகங்கள் உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்தாமல் அப்படியே நிலுவையில் வைத்துள்ளதால் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...