Monday, August 21, 2017

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையிடம் இருந்து தப்பிக்க தங்க கட்டிகளை விழுங்கிய பயணி
2017-08-21@ 01:08:11




திருச்சி: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர்ஏசியா விமானம் நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். இமிகிரேசன் சோதனைக்கு அடுத்தப்படியாக சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பயணிகள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது பயணி ஒருவர் இமிகிரேசன் சோதனை முடிந்த பிறகு சுங்கதுறை அதிகாரிகளின் சோதனைக்கு செல்லாமல் அவர்களிடமிருந்து தப்பிக்க விமான நிலையத்தின் வருகை பகுதி வழியாக சாவகாசமாக வெளியேறினார். இதை கண்காணிப்பு கேமராவில் பார்த்த சுங்கதுறை அதிகாரிகள் அந்த நபரை பின்தொடர்ந்து விரட்டினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரர்கள் அவரை மடக்கி பிடித்து சுங்கதுறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

சுங்கதுறை அதிகாரிகள் பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டினத்தை சேர்ந்த முஸ்தபா மகன் முகமதுசலீம் (49) என்பதும், அவர் மலேசியாவில் இருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பிலான 50 கிராம் கொண்ட 6 தங்க கட்டிகளை கடத்தி வந்தததும், விமான நிலையத்திற்கு வெளியே தப்பிச்சென்றபோது 6 தங்க கட்டிகளை விழுங்கியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து திருச்சி விமானநிலைய சுங்க துறை அதிகாரிகள் ஜேஎம் 1 நீதிபதி கவுதமன் முன் ஆஜர்படுத்தி முகமதுசலீம் விழுங்கிய தங்கத்தை எடுப்பதற்காக அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று மதியத்திற்குள் விழுங்கிய தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்படும் என சுங்கதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...