புதுவை அருகே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் மணமகன் குடித்து விட்டு பேசியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
2017-08-21@ 01:24:24

காலாப்பட்டு: புதுவையை அடுத்த தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த 24 வயதுள்ள பி.காம்., பட்டதாரி பெண்ணுக்கும், சிதம்பரத்தில் தனியார் வங்கி மேலாளராக பணிபுரிந்து வரும் 26 வயது நபருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு குடும்பத்தினரும் முடிவு செய்தனர். கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர்.
மணமகனான வங்கி மேலாளருக்கு மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இரவு நேரங்களில் மதுகுடித்து விட்டு மணப்பெண்ணிடம் செல்போனில் பேசி வந்தார். நாளடைவில் வங்கி மேலாளர் போதையில் எல்லை மீறி பேச தொடங்கியுள்ளார். அதன் பிறகுதான் மாப்பிள்ளை குடிப்பழக்கம் உள்ளவர் என்பது மணப்பெண்ணுக்கு தெரியவந்தது.
இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. திருமணத்தை நிறுத்துமாறு மணப்பெண் பெற்றோரிடம் கூறி வந்தார். ஆனால் அவர்கள் ஊரறிய நிச்சயம் செய்து விட்டு தற்போது திருமணத்தை நிறுத்தினால் குடும்ப கவுரவம் பாதிக்கும் என்று மகளுக்கு அறிவுரை கூறினர். ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை. குடிப்பழக்கம் உள்ளவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என உறுதியான முடிவெடுத்த அந்த பெண், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சென்று நடந்த விவரங்களை தெரிவித்து திருமணத்தை நிறுத்துமாறு புகார் அளித்தார்.
இதையடுத்து மகளிர் போலீசார் இருதரப்பினரையும் வரவழைத்து மணமகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் அவரை திருமணம் செய்ய மணமகளுக்கு விருப்பம் இல்லை என்றும் பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து வைப்பது சட்டத்துக்கு புறம்பானது என எடுத்து கூறி அனுப்பி வைத்தனர். இதனால் திருமணம் நின்றது.
2017-08-21@ 01:24:24

காலாப்பட்டு: புதுவையை அடுத்த தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த 24 வயதுள்ள பி.காம்., பட்டதாரி பெண்ணுக்கும், சிதம்பரத்தில் தனியார் வங்கி மேலாளராக பணிபுரிந்து வரும் 26 வயது நபருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு குடும்பத்தினரும் முடிவு செய்தனர். கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர்.
மணமகனான வங்கி மேலாளருக்கு மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இரவு நேரங்களில் மதுகுடித்து விட்டு மணப்பெண்ணிடம் செல்போனில் பேசி வந்தார். நாளடைவில் வங்கி மேலாளர் போதையில் எல்லை மீறி பேச தொடங்கியுள்ளார். அதன் பிறகுதான் மாப்பிள்ளை குடிப்பழக்கம் உள்ளவர் என்பது மணப்பெண்ணுக்கு தெரியவந்தது.
இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. திருமணத்தை நிறுத்துமாறு மணப்பெண் பெற்றோரிடம் கூறி வந்தார். ஆனால் அவர்கள் ஊரறிய நிச்சயம் செய்து விட்டு தற்போது திருமணத்தை நிறுத்தினால் குடும்ப கவுரவம் பாதிக்கும் என்று மகளுக்கு அறிவுரை கூறினர். ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை. குடிப்பழக்கம் உள்ளவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என உறுதியான முடிவெடுத்த அந்த பெண், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சென்று நடந்த விவரங்களை தெரிவித்து திருமணத்தை நிறுத்துமாறு புகார் அளித்தார்.
இதையடுத்து மகளிர் போலீசார் இருதரப்பினரையும் வரவழைத்து மணமகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் அவரை திருமணம் செய்ய மணமகளுக்கு விருப்பம் இல்லை என்றும் பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து வைப்பது சட்டத்துக்கு புறம்பானது என எடுத்து கூறி அனுப்பி வைத்தனர். இதனால் திருமணம் நின்றது.
No comments:
Post a Comment