Monday, August 21, 2017

தமிழகத்தில் பரவலாக கன மழை

பதிவு செய்த நாள்
ஆக 20,2017 17:56



சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களின் கனமழை பெய்தது.
ராயப்பேட்டை,மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி , தேனாம்பேட்டை, கோயம்பேடு, பெரம்பூர், ஆர்.கே.நகர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்கிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கோலியனூர், விக்கிரவாண்டி, ஜானகிபுரம், முண்டியம்பாக்கம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, ஆதனூர், காமக்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

வேலூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டை, குரிசிலிப்பட்டு, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா வந்தவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம்:

சிறுமலை பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக, கடந்த சில நாட்களாக குட்லாடம்பட்டி அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையறிந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அங்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் அங்கு திரண்டனர்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...