உப்புக்கு ஒரு ரூபாய் வசூலித்த ஓட்டல்
பதிவு செய்த நாள்24ஆக
2017
14:48

ஐதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில், உப்புக்கு ஒரு ரூபாய் கட்டணம் வசூலித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நடந்தது என்ன?
ஐதராபாத்தில், ராஜ்பவன் சாலையில் சோமாஜிகுடா என்ற இடத்தில், பார் வசதியுடன் கூடிய ஓட்டல் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை, அவினாஷ் சேதி என்பவர் தன் குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது தான் சாப்பிட இருந்த எலுமிச்சை கலந்த சோடாவில் சேர்க்க, கூடுதலாக சிறிய அளவிலான உப்பு தரும்படி கேட்டுள்ளார். ஆனால், பில்லில் அதற்கான கட்டணம் சேர்க்கப்படும் என அவருக்கு தெரியாது. அனைத்தும் முடிந்து பில் வந்த போது சேதி அசந்து விட்டார். உப்புவுக்கு ஒரு ரூபாய் கட்டணம் என அந்த பில்லில் போடப்பட்டு இருந்தது. இந்த தகவல் சமூக வலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓட்டல் நிர்வாகம் விளக்கம்
இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில், ' இது தவறாக நடந்து விட்ட சம்பவம். நாங்கள் புதிய சாப்ட்வேரை பயன்படுத்த துவங்கி உள்ளோம். அதைஊழியர்கள் தற்போது தான் பயன்படுத்த துவங்கி உள்ளனர். சேதி என்பவர் பில்லுக்கு பணம் கட்டும் போது, இரவு, 11 மணியாகி இருந்தது. ஊழியர்கள் பணியை முடிக்கும் அவசரத்தில் இருந்தனர். எனவே, பில்லை கவனிக்க முடியவில்லை' என்றனர்.சேதி சாப்பிட்ட எலுமிச்சை கலந்த சோடாவின் கட்டணமான, 150 ரூபாயை திரும்ப தர ஓட்டல் நிர்வாகம் முன் வந்தது. ஆனால், சேதி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
பதிவு செய்த நாள்24ஆக
2017
14:48

ஐதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில், உப்புக்கு ஒரு ரூபாய் கட்டணம் வசூலித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நடந்தது என்ன?
ஐதராபாத்தில், ராஜ்பவன் சாலையில் சோமாஜிகுடா என்ற இடத்தில், பார் வசதியுடன் கூடிய ஓட்டல் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை, அவினாஷ் சேதி என்பவர் தன் குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது தான் சாப்பிட இருந்த எலுமிச்சை கலந்த சோடாவில் சேர்க்க, கூடுதலாக சிறிய அளவிலான உப்பு தரும்படி கேட்டுள்ளார். ஆனால், பில்லில் அதற்கான கட்டணம் சேர்க்கப்படும் என அவருக்கு தெரியாது. அனைத்தும் முடிந்து பில் வந்த போது சேதி அசந்து விட்டார். உப்புவுக்கு ஒரு ரூபாய் கட்டணம் என அந்த பில்லில் போடப்பட்டு இருந்தது. இந்த தகவல் சமூக வலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓட்டல் நிர்வாகம் விளக்கம்
இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில், ' இது தவறாக நடந்து விட்ட சம்பவம். நாங்கள் புதிய சாப்ட்வேரை பயன்படுத்த துவங்கி உள்ளோம். அதைஊழியர்கள் தற்போது தான் பயன்படுத்த துவங்கி உள்ளனர். சேதி என்பவர் பில்லுக்கு பணம் கட்டும் போது, இரவு, 11 மணியாகி இருந்தது. ஊழியர்கள் பணியை முடிக்கும் அவசரத்தில் இருந்தனர். எனவே, பில்லை கவனிக்க முடியவில்லை' என்றனர்.சேதி சாப்பிட்ட எலுமிச்சை கலந்த சோடாவின் கட்டணமான, 150 ரூபாயை திரும்ப தர ஓட்டல் நிர்வாகம் முன் வந்தது. ஆனால், சேதி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
No comments:
Post a Comment