சென்னையில் மீண்டும் பெரு வெள்ளம்..?
பதிவு செய்த நாள்25ஆக
2017
04:58

'சென்னையில், நவம்பரில் வெள்ளம் வரும்' என, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது.
ஜூனில் துவங்கிய தென் மேற்கு பருவமழை, இறுதி கட்டத்தை எட்டிஉள்ளது. செப்., இறுதி வரை, இந்த மழை நீடிக்கும்; அக்டோபரில், வட கிழக்கு பருவமழை துவங்கும். 'தென் மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும், இயல்பான அளவு பெய்யும்' என, இந்திய வானிலை ஆய்வு மையமும், சர்வதேச வானிலை ஆய்வு மையமும், ஏற்கனவே அறிவித்துள்ளன.
அதே போல், 2015ல், சென்னைக்கு வெள்ளத்தை ஏற்படுத்திய, 'எல் நினோ' மற்றும் 2016ல், சென்னையை புயல் தாக்க காரணமான, 'லா நினா' ஆகிய, இரு பருவ நிலைகளும், தற்போது இல்லை என்றும், வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில், 'நவம்பரில், சென்னையை புயல், வெள்ளம் தாக்கி அழிக்கும்' என, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா' தெரிவித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது. இது போன்ற தகவல்களை, நாசா தெரிவிக்கவில்லை.
இது குறித்து, வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: நவ., மாதம், தமிழகத்திற்கு அதிக மழையை கொடுக்கும், வட கிழக்கு பருவமழை காலம். அப்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலமோ, புயலோ உருவாகி, மழையை கொடுக்கும். கடந்த, 2015 மற்றும் 2016ல், பசிபிக் கடலில் ஏற்பட்ட மாற்றத்தால், இயற்கை சீற்றங்கள் உருவாகின. இதை, ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிகழ்வுகளை காட்டி, சிலர் ஆண்டுதோறும், மக்களிடம் பீதியை ஏற்படுத்துகின்றனர்.
புயல், மழை, வெள்ளம் குறித்து, செயற்கைக்கோள்கள் வாயிலாக கணித்து, வானிலை ஆய்வு மையம் மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கும். ஆனால், மூன்று மாதங்கள் கழித்து தாக்கும் புயல், தற்போதே உருவாகிக் கொண்டிருப்பதாக வதந்தி பரப்புவது, மூடநம்பிக்கையை காட்டுகிறது. எனவே, அடிப்படை அறிவியல் ஆதாரமற்ற வதந்திகளை, பொதுமக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
'இது போன்று பீதி ஏற்படுத்துவோர் மற்றும் வலைதளங்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நமது நிருபர் -
பதிவு செய்த நாள்25ஆக
2017
04:58

'சென்னையில், நவம்பரில் வெள்ளம் வரும்' என, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது.
ஜூனில் துவங்கிய தென் மேற்கு பருவமழை, இறுதி கட்டத்தை எட்டிஉள்ளது. செப்., இறுதி வரை, இந்த மழை நீடிக்கும்; அக்டோபரில், வட கிழக்கு பருவமழை துவங்கும். 'தென் மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும், இயல்பான அளவு பெய்யும்' என, இந்திய வானிலை ஆய்வு மையமும், சர்வதேச வானிலை ஆய்வு மையமும், ஏற்கனவே அறிவித்துள்ளன.
அதே போல், 2015ல், சென்னைக்கு வெள்ளத்தை ஏற்படுத்திய, 'எல் நினோ' மற்றும் 2016ல், சென்னையை புயல் தாக்க காரணமான, 'லா நினா' ஆகிய, இரு பருவ நிலைகளும், தற்போது இல்லை என்றும், வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில், 'நவம்பரில், சென்னையை புயல், வெள்ளம் தாக்கி அழிக்கும்' என, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா' தெரிவித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது. இது போன்ற தகவல்களை, நாசா தெரிவிக்கவில்லை.
இது குறித்து, வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: நவ., மாதம், தமிழகத்திற்கு அதிக மழையை கொடுக்கும், வட கிழக்கு பருவமழை காலம். அப்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலமோ, புயலோ உருவாகி, மழையை கொடுக்கும். கடந்த, 2015 மற்றும் 2016ல், பசிபிக் கடலில் ஏற்பட்ட மாற்றத்தால், இயற்கை சீற்றங்கள் உருவாகின. இதை, ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிகழ்வுகளை காட்டி, சிலர் ஆண்டுதோறும், மக்களிடம் பீதியை ஏற்படுத்துகின்றனர்.
புயல், மழை, வெள்ளம் குறித்து, செயற்கைக்கோள்கள் வாயிலாக கணித்து, வானிலை ஆய்வு மையம் மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கும். ஆனால், மூன்று மாதங்கள் கழித்து தாக்கும் புயல், தற்போதே உருவாகிக் கொண்டிருப்பதாக வதந்தி பரப்புவது, மூடநம்பிக்கையை காட்டுகிறது. எனவே, அடிப்படை அறிவியல் ஆதாரமற்ற வதந்திகளை, பொதுமக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
'இது போன்று பீதி ஏற்படுத்துவோர் மற்றும் வலைதளங்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment