Saturday, August 26, 2017

ஓய்வூதியர்களுக்கு குறைதீர் கூட்டம்

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:38

திருவள்ளூர்;திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும், 12ம் தேதி, ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.திருவள்ளூர் மாவட்ட ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம் வரும், 12ம் தேதி, ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. ஓய்வூதியதாரர்கள், தங்கள் பெயர், முகவரி, இறுதியாக பணிபுரிந்த அலுவலகம், தலைமை அலுவலகத்தின் முகவரி, ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதியப் புத்தக எண் மற்றும் கோரிக்கை விபரங்களை, மனுவில் குறிப்பிடப்பட வேண்டும்.
இம்முறையீடுகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன், வரும் 12ம் தேதி காலை, 10:30 மணிக்கு, பரிசீலனை செய்யப்பட்டு, தீர்வு காணப்படும்.ஓய்வூதியதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி, மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...