Saturday, August 26, 2017

கடித்து குதறிய குரங்குகள் அரக்கோணத்தில் 12 பேர் காயம்
பதிவு செய்த நாள்26ஆக
2017
02:24


அரக்கோணம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில், குரங்குகள் கடித்து, 12 பயணியர், காயம் அடைந்தனர்.வேலுார் மாவட்டம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் வழியாக, தினமும், நுாற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன; 140 சரக்கு ரயில்கள் தினமும் சென்று, வருகின்றன. இதனால், இங்கு எப்போதும் பயணியர் கூட்டம் நிரம்பி வழியும்.
இங்கு, நுாற்றுக்கணக்கான குரங்குகள் வசிக்கின்றன. ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணியர் உடமைகள், சாப்பாட்டு பொட்டலங்களை, குரங்குகள் பறித்து செல்கின்றன. 

அப்போது, பயணியரை குரங்குகள் தாக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. கடந்த மே, 7ல், பிளாட்பாரத்தில் காத்து இருந்த பயணியரை
குரங்குகள் கடித்ததில், 21 பேர் காயமடைந்தனர்.இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, இரண்டாவது பிளாட்பாரத்தில் ரயிலுக்காக காத்திருந்த, காட்பாடி, வேலுாரை சேர்ந்தவர்கள் உட்பட, 12 பயணியரை, குரங்குகள் கடித்து குதறின.

காயமடைந்தவர்களை, ரயில்வே போலீசார் மீட்டு, அரக்கோணம் ரயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர்.குரங்குகளை அப்புறப்
படுத்தாவிட்டால், விரைவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அரக்கோணம் ரயில்வே பயணியர் நலச்சங்கம், எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...