Saturday, August 26, 2017

சுதந்திர போராட்ட தியாகிக்கு 'பென்ஷன்' வழங்க ஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள்26ஆக
2017
02:20

சென்னை, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்ற தியாகிக்கு, 'பென்ஷன்' வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாகை மாவட்டத்தைச் சேர்ந்த, முத்தைய்யன்
தாக்கல் செய்த மனு:

நாடு முழுவதும், 1942ல், 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் நடந்தது. மயிலாடுதுறையில், நான் பங்கேற்றேன். 1942 அக்., 7 முதல், 21 வரை, மயிலாடுதுறை கிளை சிறையில் இருந்தேன்; பென்ஷன் கேட்டு விண்ணப்பித்தேன். 

அதை, நாகை மாவட்ட கலெக்டர் நிராகரித்து விட்டார். நான் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உள்ளேன். எனக்கு, பென்ஷன் தர மறுப்பது சரியல்ல. எனவே, பென்ஷன் வழங்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ரூபா ஆஜாரானார். அரசு தரப்பில், வழக்கறிஞர் அகில் அக்பர் அலி ஆஜராகி, 'தியாகிகளுக்கான பென்ஷன் பெற வேண்டும் என்றால், குறைந்தது, 21 நாட்கள் சிறையில் இருந்திருக்க வேண்டும்.
'சுதந்திர போராட்டத்தில் மனுதாரர் பங்கேற்றதற்கு, எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை' என்றார்.மனுவை விசாரித்த,
நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

பென்ஷன் கோரிய மனுவை நிராகரித்து, அரசு பிறப்பித்த உத்தரவில் மனுதாரர், அப்போது, 18 வயதை பூர்த்தி செய்து இருக்கவில்லை. 21 நாட்கள் சிறையில் இல்லை என, கூறப்பட்டு உள்ளது.
ஆனால், மனுதாரர் தரப்பில், சிறையில் இருந்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்திருக்கிறார். அந்த நாட்கள், பென்ஷன் பெற போதுமானதாக இல்லை என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மனுதாரரை பொறுத்த வரை, 15 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.சுதந்திரத்திற்காக போராடியவர்களின், துன்பங்களை குறைப்பதற்காக, பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. சுதந்திர போராட்டத்தில், 18 வயதுக்கு குறைவானவர்களும் பங்கேற்று
உள்ளனர். 

அவர்கள் தரப்பில் ஆதாரங்களை சமர்ப்பித்தால், அதை பரிசீலிக்க வேண்டும். தொழில்நுட்ப காரணங்களுக்காக, விண்ணப்பத்தை நிராகரிப்பது சரியல்ல.
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற போது, 18 வயது நிரம்பாதவர்களுக்கும், பென்ஷன் வழங்க வேண்டும் என, உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஏற்கனவே உத்தரவிட்டுஉள்ளது.

மனுதாரரை பொறுத்தவரை, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். தாக்கல் செய்த, ஆவணங்களின் அடிப்படையில் பென்ஷன் வழங்கப்பட வேண்டும். பென்ஷன் பெற தகுதியான தேதியில் இருந்து, இன்று வரை, பென்ஷன் தொகை வழங்கப்பட வேண்டும்.நாட்டின் விடுதலைக்காக போராடிய, மனுதாரர் போன்றவர்களுக்கு, சட்டப்பூர்வமான உரிமை மறுக்கப்படுவதை கண்டு, இந்த நீதிமன்றம் வேதனை கொள்கிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...