உயர் சிறப்பு மருத்துவ மாணவர் சேர்க்கை நிறுத்தி வைப்பு
பதிவு செய்த நாள்25ஆக
2017
22:44
சென்னை, 'உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான, இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது' என, மத்திய அரசின், மருத்துவ மாணவர் சேர்க்கை கமிட்டி தெரிவித்துள்ளது.இது குறித்து, அக்கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' எனப்படும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான, முதற்கட்ட மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துஉள்ளது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கு,
ஐதராபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.நீதிமன்றத்தில் இருந்து, முழுமையான தீர்ப்பு வரும் வரை, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்படுகிறது. தீர்ப்பு வந்ததும், கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு, www.mcc.nic.in இணையதளத்தில் வெளியிடப்படும். அதனால், மாணவர்கள் தொடர்ந்து இணையதளத்தை பார்வையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பதிவு செய்த நாள்25ஆக
2017
22:44
சென்னை, 'உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான, இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது' என, மத்திய அரசின், மருத்துவ மாணவர் சேர்க்கை கமிட்டி தெரிவித்துள்ளது.இது குறித்து, அக்கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' எனப்படும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான, முதற்கட்ட மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துஉள்ளது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கு,
ஐதராபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.நீதிமன்றத்தில் இருந்து, முழுமையான தீர்ப்பு வரும் வரை, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்படுகிறது. தீர்ப்பு வந்ததும், கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு, www.mcc.nic.in இணையதளத்தில் வெளியிடப்படும். அதனால், மாணவர்கள் தொடர்ந்து இணையதளத்தை பார்வையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment