2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு செப். ௨௦ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு
பதிவு செய்த நாள்25ஆக
2017
22:01
புதுடில்லி, '௨ஜி' அலைக்கற்றை முறைகேடு வழக்கில், நேற்று அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு வழங்கும் தேதியை, அடுத்த மாதம், ௨௦ம் தேதி அறிவிப்பதாக, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி. ஷைனி தெரிவித்துள்ளார்.மத்தியில், மன்மோகன் சிங் தலைமையில், முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணிஆட்சி இருந்த போது, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, '2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனால், அரசுக்கு, 1.78 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக, சி.ஏ.ஜி., என்கிற மத்திய தலைமை கணக்கு அலுவலகம் குற்றஞ்சாட்டியது. இது பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.விசாரணை முழுதும், ஏப்ரல் ௨௬ல் முடி
வடைந்தது. தீர்ப்பு எழுதும் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், தீர்ப்பு வழங்கும் தேதியை, செப்., ௨௦ல் அறிவிப்பதாக, நிதிபதி, சைனி நேற்று தெரிவித்தார்.
பதிவு செய்த நாள்25ஆக
2017
22:01
புதுடில்லி, '௨ஜி' அலைக்கற்றை முறைகேடு வழக்கில், நேற்று அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு வழங்கும் தேதியை, அடுத்த மாதம், ௨௦ம் தேதி அறிவிப்பதாக, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி. ஷைனி தெரிவித்துள்ளார்.மத்தியில், மன்மோகன் சிங் தலைமையில், முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணிஆட்சி இருந்த போது, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, '2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனால், அரசுக்கு, 1.78 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக, சி.ஏ.ஜி., என்கிற மத்திய தலைமை கணக்கு அலுவலகம் குற்றஞ்சாட்டியது. இது பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.விசாரணை முழுதும், ஏப்ரல் ௨௬ல் முடி
வடைந்தது. தீர்ப்பு எழுதும் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், தீர்ப்பு வழங்கும் தேதியை, செப்., ௨௦ல் அறிவிப்பதாக, நிதிபதி, சைனி நேற்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment