Saturday, August 26, 2017

'தனிமனித சுதந்திரம் தீர்ப்புமாட்டிறைச்சிக்கும் பொருந்தும்'

பதிவு செய்த நாள்25ஆக
2017
19:40


புதுடில்லி, 'ஆதார் வழக்கில், தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையே என்ற தீர்ப்பு, மாட்டிறைச்சி தொடர்பான வழக்குக்கும் பொருந்தும்' என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.ஆதார் தொடர்பான வழக்கில், 'தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையே' என, உச்ச நீதிமன்றத்தின், ஒன்பது நீதிபதிகள் அமர்வு, நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.இந்த நிலையில், மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் மஹாராஷ்டிர அரசின் உத்தரவுக்கு, மும்பை ஐகோர்ட் விதித்த தடையை எதிர்க்கும் வழக்கு, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனிமனித சுதந்திரம் தீர்ப்பு குறித்து, வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர். 'என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என்று மற்றவர்கள் நம்முடைய விருப்பத்தில் தலையிடுவதை எவரும் விரும்புவதில்லை. 'அதனால், இந்த வழக்கில், தனிமனித சுதந்திர தீர்ப்பும் பொருந்தும்' என, அமர்வு கூறியது.வழக்கின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...