ஆற்றங்கரையில் செத்து மிதக்கும் மீன்கள் தொடர்வதால் மீனவர்கள் பாதிப்பு
பதிவு செய்த நாள்25ஆக
2017
22:52

ராமநாதபுரம், ராமநாதபுரம் அருகே, கழிமுக பகுதியில் இறால் பண்ணை
கழிவுகளால் கடலில் மீன்கள் செத்து மிதப்பது தொடர்கிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம்,
ஆற்றங்கரை கடற்கரை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். பாரம்பரிய முறையில் கரைவலை, வல்லம், பைபர் படகுகளில் மீன் பிடித்து வாழ்கின்றனர்.
இப்பகுதியில், வெளியூர் விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால், மீன் வளம் குறைந்துள்ளது. இந்நிலையில், ஆற்றின்கரை கழிமுக பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கடலில் மீன்கள் செத்து மிதக்கின்றன. ஏற்கனவே, ஆக.,9ல் இதுபோல் கரை ஒதுங்கின. தற்போது கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் கரை ஒதுங்கியுள்ளன.
ஆற்றங்கரை மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் முகமது அலி ஜின்னா கூறியதாவது:
இப்பகுதியில், 200க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் உள்ளன. இறால் உணவு, விரைவான வளர்ச்சி, நோய்களுக்காக வேதிப்பொருட்களை கலக்கின்றனர். கழிவுகளை கடலில் விடுவதால் ஏற்படும் நச்சுத்தன்மையால் மீன்கள் செத்து கரை ஒதுங்கலாம். கடலில் மீன் வளம் குறைந்து தொழில் நசிந்து வரும் நிலையில், பாதிப்பை ஏற்படுத்தும், இறால் பண்ணைகளை அரசு தடை செய்ய வேண்டும், என்றார்.
இந்நிலையில், நேற்று மீன்வளத்துறை அதிகாரிகள், பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பகுதியில் கடல் நீரை சேகரித்து, மத்திய மீன்வளத்துறை ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
பதிவு செய்த நாள்25ஆக
2017
22:52

ராமநாதபுரம், ராமநாதபுரம் அருகே, கழிமுக பகுதியில் இறால் பண்ணை
கழிவுகளால் கடலில் மீன்கள் செத்து மிதப்பது தொடர்கிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம்,
ஆற்றங்கரை கடற்கரை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். பாரம்பரிய முறையில் கரைவலை, வல்லம், பைபர் படகுகளில் மீன் பிடித்து வாழ்கின்றனர்.
இப்பகுதியில், வெளியூர் விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால், மீன் வளம் குறைந்துள்ளது. இந்நிலையில், ஆற்றின்கரை கழிமுக பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கடலில் மீன்கள் செத்து மிதக்கின்றன. ஏற்கனவே, ஆக.,9ல் இதுபோல் கரை ஒதுங்கின. தற்போது கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் கரை ஒதுங்கியுள்ளன.
ஆற்றங்கரை மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் முகமது அலி ஜின்னா கூறியதாவது:
இப்பகுதியில், 200க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் உள்ளன. இறால் உணவு, விரைவான வளர்ச்சி, நோய்களுக்காக வேதிப்பொருட்களை கலக்கின்றனர். கழிவுகளை கடலில் விடுவதால் ஏற்படும் நச்சுத்தன்மையால் மீன்கள் செத்து கரை ஒதுங்கலாம். கடலில் மீன் வளம் குறைந்து தொழில் நசிந்து வரும் நிலையில், பாதிப்பை ஏற்படுத்தும், இறால் பண்ணைகளை அரசு தடை செய்ய வேண்டும், என்றார்.
இந்நிலையில், நேற்று மீன்வளத்துறை அதிகாரிகள், பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பகுதியில் கடல் நீரை சேகரித்து, மத்திய மீன்வளத்துறை ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
No comments:
Post a Comment