Saturday, August 26, 2017

பேரறிவாளனுக்கு திருமணம் தாய் அற்புதம்மாள் தகவல்

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:10




வேலுார், ''பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க உள்ளோம்,'' என, அவரது தாய் அற்புதம்மாள் கூறினார்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், வேலுார் சிறையில், 26 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு உள்ளார். 

உடல்நிலை பாதிக்கப்பட்டுஉள்ள, தன் தந்தை ஞானசேகரன், தாய் அற்புதம்மாள் ஆகியோரை பார்க்க, அவருக்கு, நேற்று முன்தினம், ஒரு மாதம், 'பரோல்' வழங்கப்பட்டது.அன்று இரவு, ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு, இரவு, 11:00 மணிக்கு, பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டார். டி.எஸ்.பி., பழனிசெல்வம் தலைமையில், 11 போலீசார், 24 மணி நேரமும், அவரதுவீட்டுக்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.'ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு, பேரறிவாளன் தினமும் சென்று, கையெழுத்து போட வேண்டும்' என, பரோல் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, போலீசாரே, பேரறிவாளன் வீட்டுக்கு வந்து கையெழுத்து வாங்குகின்றனர்.

பேரறிவாளன் தாய் அற்புதம்மாள், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
பேரறிவாளன், 20 வயதில் சிறைக்குச் சென்று, 26 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பின் தான் வெளியே வந்துள்ளார். தற்போது, அவருக்கு, 46 வயதாகிறது. பரோலில் விடுவிக்கப்பட்டது தற்காலிக மகிழ்ச்சி தான்.
அவர், நிரந்தரமாக விடுதலை செய்யப்பட வேண்டும். 

அவருக்கு திருமணம் செய்து வைக்க ஆசை; பெண் பார்த்து
வருகிறோம். வரன் அமைந்து விட்டால், பரோல் முடிவதற்குள், திருமணம் செய்து வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...