30 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார் பேரறிவாளன்
பதிவு செய்த நாள்
ஆக 24,2017 18:59

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை ஒரு மாத காலம் பரோலில் விடு விக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து இன்று இரவு பரோலில்விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் 26 ஆண்டுகள் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை காண்பதற்கு பரோலில் விடுவிக்க பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார். பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற முதல்வர் பழனிசாமி , பேரறிவாளனை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான அரசாணை வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது, பேரறிவாளன் தாயார் கோரிக்கை மனுவை ஏற்று அவரை பரோலில்விட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசாணை கிடைத்தவுடன் அவர் பரோலில் விடுவிக்கப்படுவார் என்றார்.
இதையடுத்து இன்று இரவு 8: 55 மணியளவில் வேலூர் சிறையில் இருந்து பேரறிவாளன் பரோலில் விடுதலையானார்.
பரோல் குறித்து தகவலறிந்த வட்டார்ஙகள் கூறுகையில்,, இரவு நேரத்தில் யாரும் பரோலில் விடுவிக்கப்படுவதில்லை. எனினும் பரோலை எதிர்த்து யாரும் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுவிடாது என்பதற்காகவே இரவில் பரோலில் விடுவிக்கப்பட்டார். இவ்வாறு அநத் வட்டாரங்கள் கூறுகின்றன.
விடுதலையான பேரறிவாளன், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவருடன் மூன்று போலீஸ் வாகனங்கள் பாதுகாப்புக்கு சென்றன
பேரறிவாளனுக்கு பரோல் நிபந்தைனைகள்
சிறையில் அளிக்கப்பட்ட முகவரியில் தான் தங்கி இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. பத்திரிகையாளர்களை சந்திக்க கூடாது. பொதுக்கூட்டங்களில் பங்கேற்க கூடாது என்ற விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. ஜோலார் பேட்டை காவல் நிலையத்தில் நாள் தோறும் கையெழுத்து இட வேண்டும் . பேரறிவாளனை தலைவர்கள் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பதிவு செய்த நாள்
ஆக 24,2017 18:59

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை ஒரு மாத காலம் பரோலில் விடு விக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து இன்று இரவு பரோலில்விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் 26 ஆண்டுகள் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை காண்பதற்கு பரோலில் விடுவிக்க பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார். பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற முதல்வர் பழனிசாமி , பேரறிவாளனை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான அரசாணை வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது, பேரறிவாளன் தாயார் கோரிக்கை மனுவை ஏற்று அவரை பரோலில்விட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசாணை கிடைத்தவுடன் அவர் பரோலில் விடுவிக்கப்படுவார் என்றார்.
இதையடுத்து இன்று இரவு 8: 55 மணியளவில் வேலூர் சிறையில் இருந்து பேரறிவாளன் பரோலில் விடுதலையானார்.
பரோல் குறித்து தகவலறிந்த வட்டார்ஙகள் கூறுகையில்,, இரவு நேரத்தில் யாரும் பரோலில் விடுவிக்கப்படுவதில்லை. எனினும் பரோலை எதிர்த்து யாரும் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுவிடாது என்பதற்காகவே இரவில் பரோலில் விடுவிக்கப்பட்டார். இவ்வாறு அநத் வட்டாரங்கள் கூறுகின்றன.
விடுதலையான பேரறிவாளன், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவருடன் மூன்று போலீஸ் வாகனங்கள் பாதுகாப்புக்கு சென்றன
பேரறிவாளனுக்கு பரோல் நிபந்தைனைகள்
சிறையில் அளிக்கப்பட்ட முகவரியில் தான் தங்கி இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. பத்திரிகையாளர்களை சந்திக்க கூடாது. பொதுக்கூட்டங்களில் பங்கேற்க கூடாது என்ற விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. ஜோலார் பேட்டை காவல் நிலையத்தில் நாள் தோறும் கையெழுத்து இட வேண்டும் . பேரறிவாளனை தலைவர்கள் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment