Friday, August 25, 2017

சேலம், கடலூர், சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் பணியிடமாற்றம்

பதிவு செய்த நாள்
ஆக 25,2017 00:11

சென்னை: சேலம், கடலூர் மற்றும் சிவகங்கை மாவட்ட கலெக்டர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் பணியிடமாற்றம் செய்யப்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தின் புதிய கலெக்டராக ரோகிணி ஆர்.பாஜிபாக்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்த ராஜேஷ் பணியிடமாற்றம் செய்யப்பட்டு தொழில் வர்த்தக துறையின் கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாவட்டத்தின் புதிய கலெக்டராக பிரசாந்த்தை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி மாற்றம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தின் புதிய கலெக்டராக ஜி.லதா நியமனம் செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை:

சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் கந்தசாமி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளி கல்வி துறைக்கு...

பள்ளி கல்வி துறையின் முதன்மை செயலராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை தற்காலிக முதன்மை செயலராக நியமனம் செய்து தலைமை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேசமயம் உதய சந்திரன் ஐ.ஏ.எஸ்., மாற்றப்படவில்லை. முதன்மை செயலரின் கீழ் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...