பொற்சலங்கை குலுங்க வரும் பாலகணபதி பொங்கும் இன்பம் தந்திடுவாய் எந்த நாளுமே!
பதிவு செய்த நாள்24ஆக
2017
22:27

பாடுங்க! பாட்டு பாடுங்க!
அந்த காலத்தில் தாத்தா, பாட்டிகள் பேரக் குழந்தைகளுக்கு பாடல்கள் மூலம் பிள்ளையார் பெருமையை எடுத்து சொல்வர். பெரியவர்கள் பாட சிறுவர்கள் அதைக் கேட்டு பாடுவர்.
'குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை
வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழு
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ
துள்ளி யோடும் தொடரும் வினைகளே
கருணை வள்ளல் கணபதியைத் தொழ
அருமைப் பொருள்கள் அனைத்தும் வருமே
முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்
தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை
வேழ முகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுந்து வரும்.
அந்தக்கால குழந்தைகளிடம் பக்தியை வளர்ப்பதில்
இது போன்ற பாடல்கள் உதவியாக இருந்தன.
நாமும் இதை பாடலாமே
கொண்டாட்டம் ஏன்?
விநாயகரின் அவதாரம் குறித்த செய்தி மத்ஸ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.சிவனின் மனைவி பார்வதி தன் தோழிகளுடன் நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். அப்போது தோழிகள், “தேவி! சிவனுக்குரிய பிருங்கி, நந்தி முதலிய கணங்களே நமக்கும் காவலர்களாக உள்ளனர். நமக்கென தனிக்காவலரை ஏன் நியமிக்க கூடாது?” எனக் கேட்டனர்.
உடனே பார்வதி, தன் மேனியில் பூசிய மஞ்சளை எடுத்து, சிறிது தைலத்தில் தோய்த்து குழைத்தாள். அந்த உருவத்தின் மீது கங்கை தீர்த்தம் தெளித்து உயிரூட்டினாள். அவரை தன் அந்தப்புர காவலராக நியமித்தாள். அவருக்கு 'கணபதி' என பெயரிட்டாள். அப்போது, அவர் மனித முகம் கொண்டவராகவே இருந்தார்.
இந்தநேரத்தில், பார்வதியைக் காண சிவன் அங்கு வந்தார். புதுக்காவலரான கணபதி அவரைத் தடுத்ததோடு, பார்வதியின் உத்தரவு இல்லாமல் அனுமதிக்க முடியாது என மறுத்தார். கோபம் கொண்ட சிவன் கணபதியின் தலையை வெட்டினார். பார்வதி இதைக் கண்டிக்கவே, யானைத் தலையைப் பொருத்தி உயிர்கொடுத்தார். இந்த ஆனைமுகனுக்கு முதல் பூஜை செய்த பிறகே, அனைத்து தெய்வங்களுக்கும் பூஜை நடக்க வேண்டுமென ஆணையிட்டார். விநாயகர் யானைமுகனாக அவதரித்த நாளை 'விநாயகர் சதுர்த்தி' விழாவாக கொண்டாடுகிறோம்.
பூஜை செய்வது எப்படி
காலையில் நீராடி, பூஜையறையில் மாக்கோலம் இட்டு மாவிலையால் அலங்கரிக்க வேண்டும். வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதில் பலகையிட்டு விநாயகர் களிமண் சிலை வைக்க வேண்டும். விநாயகர் படமும் வைக்கலாம். அருகம்புல், எருக்கம் பூ மாலையை அணிவித்து அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, பழங்கள் படைத்து துாப, தீபம் காட்ட வேண்டும். அப்போது அவ்வையாரின் விநாயகர் அகவலைப் படிக்க வேண்டும். இரவு விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபடவேண்டும். பூஜை முடித்த மூன்றாம் நாளில் களிமண் விநாயகரை நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும். மதியம் ஒருவேளை உணவு சாப்பிட்டு, இரவில் பால், பழம் சாப்பிட வேண்டும்.
அறுபடை வீடு கொண்ட ஆனைமுகா!
ஆறுமுகன் முருகனைப் போல ஆனைமுகனான விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன.
* முதல் படைவீடு திருவண்ணாமலைகார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பெயர் பெற்ற இங்கு அல்லல் போக்கும் விநாயகராக வீற்றிருக்கிறார். வணங்குபவர்களின் துன்பம் போக்குவதில் நிகரற்றவராக இவர் திகழ்கிறார்.
* இரண்டாம் படைவீடாக இருப்பது விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில். காசிக்குச் சமமாகத் திகழும் இங்கு 'ஆழத்துப்பிள்ளையார்' என்ற பெயரில் வீற்றிருக்கிறார். பெயருக்கேற்ப பள்ளத்திற்குள் படியிறங்கி தரிசனம் செய்ய வேண்டும். தனி கொடிமரம் இவருக்கு இருப்பது சிறப்பு. இவரை வழிபட்டபின் படியேறி மேலேறுவது போல நம் வாழ்வில் மேன்மை அளிப்பவராக இருக்கிறார்.
* மூன்றாம் படைவீடு திருக்கடையூர் அபிராமி கோயில். இங்கு 'கள்ளவாரணப் பிள்ளையார்' என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். இவரை வழிபடுவோர் நீண்ட ஆயுள், ஆரோக்கியம்
பெற்று மகிழ்வர். அபிராமிப்பட்டர் அபிராமி அந்தாதியில் இவரைப் போற்றி வணங்குகிறார்.
* நான்காம் படைவீடான மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்தி விநாயகராக வீற்றிருக்கிறார். தன்னை நாடி வருவோரின் வாழ்வில் வெற்றியை அருளும் வள்ளலாக திகழ்கிறார். அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியிலுள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் சன்னதி உள்ளது. 'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பது போல அளவில் சிறியவரான இவர் சக்தி வாய்ந்தவராக உள்ளார்.
* ஐந்தாம் படைவீடாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் உள்ளது. கற்பக மரம் போல பக்தர் விரும்பும் வரங்களை அளித்து அற்புதம் நிகழ்த்தும் இவர் பெயரால் இத்தலம் விளங்குகிறது.
* ஆறாம் படைவீடான கடலுார் மாவட்டத்திலுள்ள திருநாரையூரில் பொள்ளாப் பிள்ளையாராக இருக்கிறார். பொள்ளுதல் என்பதற்கு 'செதுக்குதல்' என்பது பொருள். உளியால் செதுக்கப்படாமல் தானாகத் தோன்றிய சுயம்பு மூர்த்தி இவர். காலப்போக்கில் பெயர் மருவி பொல்லாப்பிள்ளையார் என மாறி விட்டது.
வெள்ளியை மறக்காதீங்க!
விநாயகரை வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வழிபட வேண்டும். இன்று வெள்ளியும், சதுர்த்தியும் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. வணங்கும்போது நினைவிற்கு வரவேண்டியது அவ்வையாரின் 'சீதக்களப செந்தாமரைப்பூம்' என்று துவங்கும் 'விநாயகர் அகவல்' பாடல். இதை பாடினால், இரட்டிப்பாக பலன் உண்டாகும். காஞ்சிப்பெரியவர், “நமக்கும், நாட்டுக்கும், உலகத்துக்கும் நன்மை ஏற்பட அவ்வையார் மூலம் பிள்ளையாரை பிடிப்பதே வழி” என்கிறார்.
ரகசியத்தை தெரிஞ்சுக்கங்க!
விநாயகருக்கு மோதகம், அவல், பொரி ஆகியவற்றைப் பிரசாதமாகப் படைக்கிறோம். பெரும் தத்துவம் இதில் அடங்கிக் கிடக்கிறது. இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.மோதகம்: வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத கடவுளை அடையலாம் என்பதன் அடிப்படையில் படைக்கப்படுகிறது.அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக்
காட்டுகிறது.
'ஆன் தி வே' ஆண்டவன்
நம் வழிபாட்டில் எத்தனையோ தெய்வங்கள் இருப்பினும், குழந்தை முதல் பெரியவர் வரை முதலில் வழிபாடு செய்வது விநாயகரைத் தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பரீட்சை என்று வந்து விட்டால், “பிள்ளையாரப்பா! எனக்கு அருள் செய்வாய்,” என்று இவரிடம் போய் நிற்பர். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்லும் வழியெல்லாம் 'ஆன் தி வே ஆண்டவனாக' இருந்து நம்மை காப்பவர் இவரே. ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, ஊர்ப்பொது இடம் என்று எல்லா இடங்களிலும் இவருடைய அருளாட்சி தான் நடக்கிறது. பல நாடுகளிலும் இவரது வழிபாடு சிறப்புடன் திகழ்கிறது. ஆறுஆதாரங்களில் மூலாதார மூர்த்தியாக இருந்து நம்மை கரைசேர்ப்பவர் இந்த ஆனைமுகப் பெருமான் தான்.
காஞ்சிப்பெரியவர்சொல்றதைக் கேளுங்க!
தமிழ் முருகன், தமிழ் தெய்வம் என்றெல்லாம் முருகனை சிறப்பாக கொண்டாடுகிறோம். ஆனால், அவரின் அண்ணனான விநாயகரும் தமிழ் தெய்வம் என்கிறார் காஞ்சிப்பெரியவர்.
தமிழகத்தைப் போல, இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் விநாயகருக்கு அதிக கோயில்கள் இல்லை. சொல்லப் போனால், விநாயகரின் சாம்ராஜ்யமான மகாராஷ்டிராவில் கூட விநாயகர் கோயில்கள் குறைவாகவே உள்ளன. ஆற்றங்கரை, அரசமரம், தெருக்கோடி, முட்டுச்சந்து, வெட்டவெளி, சாலைக்கரை என்று எங்கு சென்றாலும் விநாயகருக்கு வழிபாடு நடப்பது இங்குதான். தமிழகம் 'தெய்வத்தமிழ் நாடு' என பக்தி மயமாக திகழ்வதற்கு, முருகனின் அண்ணனான விநாயகரே முதல் காரணமாக இருக்கிறார்.
பதிவு செய்த நாள்24ஆக
2017
22:27

பாடுங்க! பாட்டு பாடுங்க!
அந்த காலத்தில் தாத்தா, பாட்டிகள் பேரக் குழந்தைகளுக்கு பாடல்கள் மூலம் பிள்ளையார் பெருமையை எடுத்து சொல்வர். பெரியவர்கள் பாட சிறுவர்கள் அதைக் கேட்டு பாடுவர்.
'குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை
வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழு
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ
துள்ளி யோடும் தொடரும் வினைகளே
கருணை வள்ளல் கணபதியைத் தொழ
அருமைப் பொருள்கள் அனைத்தும் வருமே
முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்
தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை
வேழ முகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுந்து வரும்.
அந்தக்கால குழந்தைகளிடம் பக்தியை வளர்ப்பதில்
இது போன்ற பாடல்கள் உதவியாக இருந்தன.
நாமும் இதை பாடலாமே
கொண்டாட்டம் ஏன்?
விநாயகரின் அவதாரம் குறித்த செய்தி மத்ஸ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.சிவனின் மனைவி பார்வதி தன் தோழிகளுடன் நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். அப்போது தோழிகள், “தேவி! சிவனுக்குரிய பிருங்கி, நந்தி முதலிய கணங்களே நமக்கும் காவலர்களாக உள்ளனர். நமக்கென தனிக்காவலரை ஏன் நியமிக்க கூடாது?” எனக் கேட்டனர்.
உடனே பார்வதி, தன் மேனியில் பூசிய மஞ்சளை எடுத்து, சிறிது தைலத்தில் தோய்த்து குழைத்தாள். அந்த உருவத்தின் மீது கங்கை தீர்த்தம் தெளித்து உயிரூட்டினாள். அவரை தன் அந்தப்புர காவலராக நியமித்தாள். அவருக்கு 'கணபதி' என பெயரிட்டாள். அப்போது, அவர் மனித முகம் கொண்டவராகவே இருந்தார்.
இந்தநேரத்தில், பார்வதியைக் காண சிவன் அங்கு வந்தார். புதுக்காவலரான கணபதி அவரைத் தடுத்ததோடு, பார்வதியின் உத்தரவு இல்லாமல் அனுமதிக்க முடியாது என மறுத்தார். கோபம் கொண்ட சிவன் கணபதியின் தலையை வெட்டினார். பார்வதி இதைக் கண்டிக்கவே, யானைத் தலையைப் பொருத்தி உயிர்கொடுத்தார். இந்த ஆனைமுகனுக்கு முதல் பூஜை செய்த பிறகே, அனைத்து தெய்வங்களுக்கும் பூஜை நடக்க வேண்டுமென ஆணையிட்டார். விநாயகர் யானைமுகனாக அவதரித்த நாளை 'விநாயகர் சதுர்த்தி' விழாவாக கொண்டாடுகிறோம்.
பூஜை செய்வது எப்படி
காலையில் நீராடி, பூஜையறையில் மாக்கோலம் இட்டு மாவிலையால் அலங்கரிக்க வேண்டும். வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதில் பலகையிட்டு விநாயகர் களிமண் சிலை வைக்க வேண்டும். விநாயகர் படமும் வைக்கலாம். அருகம்புல், எருக்கம் பூ மாலையை அணிவித்து அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, பழங்கள் படைத்து துாப, தீபம் காட்ட வேண்டும். அப்போது அவ்வையாரின் விநாயகர் அகவலைப் படிக்க வேண்டும். இரவு விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபடவேண்டும். பூஜை முடித்த மூன்றாம் நாளில் களிமண் விநாயகரை நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும். மதியம் ஒருவேளை உணவு சாப்பிட்டு, இரவில் பால், பழம் சாப்பிட வேண்டும்.
அறுபடை வீடு கொண்ட ஆனைமுகா!
ஆறுமுகன் முருகனைப் போல ஆனைமுகனான விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன.
* முதல் படைவீடு திருவண்ணாமலைகார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பெயர் பெற்ற இங்கு அல்லல் போக்கும் விநாயகராக வீற்றிருக்கிறார். வணங்குபவர்களின் துன்பம் போக்குவதில் நிகரற்றவராக இவர் திகழ்கிறார்.
* இரண்டாம் படைவீடாக இருப்பது விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில். காசிக்குச் சமமாகத் திகழும் இங்கு 'ஆழத்துப்பிள்ளையார்' என்ற பெயரில் வீற்றிருக்கிறார். பெயருக்கேற்ப பள்ளத்திற்குள் படியிறங்கி தரிசனம் செய்ய வேண்டும். தனி கொடிமரம் இவருக்கு இருப்பது சிறப்பு. இவரை வழிபட்டபின் படியேறி மேலேறுவது போல நம் வாழ்வில் மேன்மை அளிப்பவராக இருக்கிறார்.
* மூன்றாம் படைவீடு திருக்கடையூர் அபிராமி கோயில். இங்கு 'கள்ளவாரணப் பிள்ளையார்' என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். இவரை வழிபடுவோர் நீண்ட ஆயுள், ஆரோக்கியம்
பெற்று மகிழ்வர். அபிராமிப்பட்டர் அபிராமி அந்தாதியில் இவரைப் போற்றி வணங்குகிறார்.
* நான்காம் படைவீடான மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்தி விநாயகராக வீற்றிருக்கிறார். தன்னை நாடி வருவோரின் வாழ்வில் வெற்றியை அருளும் வள்ளலாக திகழ்கிறார். அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியிலுள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் சன்னதி உள்ளது. 'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பது போல அளவில் சிறியவரான இவர் சக்தி வாய்ந்தவராக உள்ளார்.
* ஐந்தாம் படைவீடாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் உள்ளது. கற்பக மரம் போல பக்தர் விரும்பும் வரங்களை அளித்து அற்புதம் நிகழ்த்தும் இவர் பெயரால் இத்தலம் விளங்குகிறது.
* ஆறாம் படைவீடான கடலுார் மாவட்டத்திலுள்ள திருநாரையூரில் பொள்ளாப் பிள்ளையாராக இருக்கிறார். பொள்ளுதல் என்பதற்கு 'செதுக்குதல்' என்பது பொருள். உளியால் செதுக்கப்படாமல் தானாகத் தோன்றிய சுயம்பு மூர்த்தி இவர். காலப்போக்கில் பெயர் மருவி பொல்லாப்பிள்ளையார் என மாறி விட்டது.
வெள்ளியை மறக்காதீங்க!
விநாயகரை வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வழிபட வேண்டும். இன்று வெள்ளியும், சதுர்த்தியும் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. வணங்கும்போது நினைவிற்கு வரவேண்டியது அவ்வையாரின் 'சீதக்களப செந்தாமரைப்பூம்' என்று துவங்கும் 'விநாயகர் அகவல்' பாடல். இதை பாடினால், இரட்டிப்பாக பலன் உண்டாகும். காஞ்சிப்பெரியவர், “நமக்கும், நாட்டுக்கும், உலகத்துக்கும் நன்மை ஏற்பட அவ்வையார் மூலம் பிள்ளையாரை பிடிப்பதே வழி” என்கிறார்.
ரகசியத்தை தெரிஞ்சுக்கங்க!
விநாயகருக்கு மோதகம், அவல், பொரி ஆகியவற்றைப் பிரசாதமாகப் படைக்கிறோம். பெரும் தத்துவம் இதில் அடங்கிக் கிடக்கிறது. இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.மோதகம்: வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத கடவுளை அடையலாம் என்பதன் அடிப்படையில் படைக்கப்படுகிறது.அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக்
காட்டுகிறது.
'ஆன் தி வே' ஆண்டவன்
நம் வழிபாட்டில் எத்தனையோ தெய்வங்கள் இருப்பினும், குழந்தை முதல் பெரியவர் வரை முதலில் வழிபாடு செய்வது விநாயகரைத் தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பரீட்சை என்று வந்து விட்டால், “பிள்ளையாரப்பா! எனக்கு அருள் செய்வாய்,” என்று இவரிடம் போய் நிற்பர். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்லும் வழியெல்லாம் 'ஆன் தி வே ஆண்டவனாக' இருந்து நம்மை காப்பவர் இவரே. ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, ஊர்ப்பொது இடம் என்று எல்லா இடங்களிலும் இவருடைய அருளாட்சி தான் நடக்கிறது. பல நாடுகளிலும் இவரது வழிபாடு சிறப்புடன் திகழ்கிறது. ஆறுஆதாரங்களில் மூலாதார மூர்த்தியாக இருந்து நம்மை கரைசேர்ப்பவர் இந்த ஆனைமுகப் பெருமான் தான்.
காஞ்சிப்பெரியவர்சொல்றதைக் கேளுங்க!
தமிழ் முருகன், தமிழ் தெய்வம் என்றெல்லாம் முருகனை சிறப்பாக கொண்டாடுகிறோம். ஆனால், அவரின் அண்ணனான விநாயகரும் தமிழ் தெய்வம் என்கிறார் காஞ்சிப்பெரியவர்.
தமிழகத்தைப் போல, இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் விநாயகருக்கு அதிக கோயில்கள் இல்லை. சொல்லப் போனால், விநாயகரின் சாம்ராஜ்யமான மகாராஷ்டிராவில் கூட விநாயகர் கோயில்கள் குறைவாகவே உள்ளன. ஆற்றங்கரை, அரசமரம், தெருக்கோடி, முட்டுச்சந்து, வெட்டவெளி, சாலைக்கரை என்று எங்கு சென்றாலும் விநாயகருக்கு வழிபாடு நடப்பது இங்குதான். தமிழகம் 'தெய்வத்தமிழ் நாடு' என பக்தி மயமாக திகழ்வதற்கு, முருகனின் அண்ணனான விநாயகரே முதல் காரணமாக இருக்கிறார்.
No comments:
Post a Comment