Tuesday, August 22, 2017

3,600 'டாஸ்மாக்' ஊழியர்கள் ரேஷன் கடைகளுக்கு மாற்றம்
பதிவு செய்த நாள்22ஆக
2017
00:32


'டாஸ்மாக்' கடைகளில் உபரியாக உள்ள ஊழியர்களை, ரேஷன் கடைகளில் நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, தமிழகத்தில், மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த, 3,321 மது கடைகள், ஏப்., முதல் மூடப்பட்டன. அவற்றில் பணிபுரிந்த ஊழியர்கள், வேறு கடைகளுக்கு மாற்றப்பட்டனர்.இருப்பினும், தங்களின் கல்வித் தகுதிக்குஏற்ப, அரசு துறைகளில் வேலை வழங்குமாறு, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனர்.இந்நிலையில், உபரியாக உள்ள டாஸ்மாக் ஊழியர்களை, ரேஷன் கடைகளில் நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது.இதுகுறித்து, கூட்டுறவுமற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கூட்டுறவு ரேஷன் கடைகளில், 3,134 விற்பனையாளர்கள், 443 எடையாளர்கள் என, மொத்தம், 3,577 காலி பணியிடங்கள் உள்ளன. டாஸ்மாக் கடைகளில், 15 ஆயிரத்து, 424 பேர் உபரியாக உள்ளனர்.எனவே, 10 மற்றும் பிளஸ் 2 முடித்த டாஸ்மாக் ஊழியர்கள், ரேஷன் கடைகளில் நியமிக்கப்பட உள்ளனர். அதன் படி, ரேஷன் விற்பனையாளர் பதவிக்கு, முதலாண்டுக்கு, மாதம், 5,000 ரூபாய்; எடையாளருக்கு, 4,300 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும்.அடுத்த ஆண்டில் இருந்து, விற்பனையாளருக்கு, 4,300 - 12 ஆயிரம் ரூபாய்; எடையாளருக்கு, 3,900 - 11 ஆயிரம் ரூபாய் என்ற, காலமுறை ஊதியம் வழங்கப்படும்.சில தினங்களில், டாஸ்மாக் நிறுவனத்திடம் இருந்து பட்டியல் பெறப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு ஊழியர்கள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு, ரேஷன் தொடர்பாக, 15 நாட்கள் பயிற்சி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:மது கடைகளில், பட்டதாரிகள், ஆசிரியர் பயிற்சி முடித்தவர் என, பலர் வேலை செய்கின்றனர்.கல்வி தகுதிக்கு ஏற்ப, வேறு அரசு துறைகளில் வேலை வழங்குமாறு கேட்டால், ரேஷன் கடைகளில் குறைந்த ஊதியத்தில் வேலை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.அதிலும், டாஸ்மாக் பணி அனுபவத்தை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை. இது, ஏற்புடையது அல்ல.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...