Wednesday, August 16, 2017


ராமநாதபுரத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் அலட்சியம் காட்டிய அரசியல்வாதிகள்!





ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவில்லை. தொகுதி அமைச்சரும் ராமநாதபுரம் எம்.எல்.ஏ-வுமான மணிகண்டன் முதல்வர் பங்கேற்ற நிகழ்சியில் பங்கேற்ற நிலையில் மற்றவர்களான பரமக்குடி முத்தையா, திருவாடானை கருணாஸ் ஆகிய இருவரும் எங்கே சென்றார்கள் எனத் தெரியவில்லை. முதுகுளத்தூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாண்டி தனது தொகுதியில் தேசிய கொடி ஏற்றினார். அங்கும் பிரச்சனைதான். கொடியேற்ற விழாவை ஏற்பாடு செய்தவர்கள் தேசிய கொடியினை தலைகீழாக கட்டி வைக்க இதனை அறியாத எம்.எல்.ஏ பாண்டி, கொடியை அப்படியே ஏற்றி விட்டார். பின்னர் அதனை கீழிறக்கி சரி செய்து மீண்டும் ஏற்றி வைத்தார்.

அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால் அதிகாரிகள் அதற்கு ஒரு படி மேலாக சென்று தேசியக் கொடியை அவமதித்து உள்ளனர். சாயல்குடி காவல் நிலையத்தில் தேசிய கொடி ஏற்றுவதற்கு என தனி கொடி கம்பம் நல்ல நிலையில் உள்ளது. ஆனால் அதை விடுத்து, காவல் நிலைய கட்டடத்தின் மேல் இருந்த சிறு கம்பி ஒன்றில் தேசியக் கொடியினை கட்டி தங்கள் தேசப் பற்றை வெளிகாட்டியுள்ளனர்.


Dailyhunt

No comments:

Post a Comment

ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்!

DINAMANI. 14.03.2026 ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்! உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக உதிக்கும் "நன்றி' என்ற ஒற்றைச் சொல்லே நம...