Friday, August 25, 2017

கருவூலத்தில் ரூ.1.50 கோடி மோசடி - அதிகாரி மரணம்; விசாரணை சிக்கல்

பதிவு செய்த நாள்25ஆக
2017
01:10

திண்டுக்கல்: அரசு கருவூலத்தில், வறட்சி நிவாரண நிதி, 1.5 கோடியை மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய அலுவலர் இறந்ததால், விசாரணையில் சிக்கல் நீடிக்கிறது.

கொடைக்கானல் சார்நிலை கருவூல இளநிலை உதவியாளர் அருண்குமார், 34. இவரும் கூடுதல் சார்நிலை கருவூலர் விஜயகுமாரும் கருவூல கணக்கில் இருந்த, அரசின் வறட்சி நிவாரண நிதி, 1.5 கோடியை, 11 பேரின் வங்கி கணக்கில் வரவு வைத்து மோசடி செய்தது, சில நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள அருண்குமார் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அவரது மனைவி, கனிமொழி பெயரில், 3 ஏக்கர் நிலம் இருப்பது தெரிந்தது. மேலும், 28 சவரன் நகை, 2.40 லட்ச ரூபாயை கைப்பற்றினர்.

இதையடுத்து, அருண்குமார் - கனிமொழியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கல்லீரல் பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த, விஜயகுமார், மதுரையில் இரு நாட்களுக்கு முன் மரணமடைந்தார். இவர் இறந்ததால் விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், யாரிடம் விசாரணை நடத்துவது என தெரியாமல் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.07.2026