Thursday, August 24, 2017

முதுநிலை இன்ஜி., படிப்பில் 82 சதவீத இடங்கள் காலி

பதிவு செய்த நாள்24ஆக
2017
00:00

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., படிப்புகளில், 82 சதவீத இடங்கள் மாணவர்கள் இன்றி காலியாக உள்ளன. பி.இ., - பி.டெக்., முடித்த மாணவர்கள், மத்திய அரசின், 'கேட்' அல்லது மாநில அரசின், 'டான்செட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, முதுநிலை படிப்பில் சேர்க்கப்படுகின்றனர். இந்த தேர்வுப்படி, அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான் படிப்புகளில், கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஆக., 20 முதல், 23 வரை நடந்தது. மொத்தம், 300க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், 19 ஆயிரத்து, 677 இடங்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இதில், 4,985 பேர் தகுதி பெற்றனர்; 1,359 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை. பிடித்த பாடப்பிரிவு, கல்லுாரி கிடைக்காததால், 148 பேர் இடங்களை தேர்வு செய்யவில்லை. மீதம், 3,478 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

மொத்த இடங்களில், 18 சதவீதம் மட்டும் நிரம்பியது. சேர மாணவர்கள் இன்றி, மீதம், 82 சதவீத இடங்கள் காலியாக உள்ளது. இதனால், இன்ஜி., கல்லுாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. மிகவும் சொற்ப இடங்களில், மாணவர் சேர்க்கை பெற்ற கல்லுாரிகள், வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்புகளை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளன.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...