Thursday, August 24, 2017

தினகரனால் நெருக்கடி: முதல்வர் ஆலோசனை

தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டலை சமாளிப் பது குறித்தும்,அவரது அணியில் உள்ள, எம்.எல். ஏ.,க்களை இழுப்பது குறித்தும், முதல் வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.



அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், சசிகலா குடும்பத்தினர், ஆட்சியையும், கட்சியையும், தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க, பகீரத பிரயத் தனத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர் உதவியுடன், ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளனர். கவர்னரை சந்தித்து, 19 பேரும், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, கடிதம் கொடுத்துள்ளனர்.

இதனால், அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ற்பட்டுள்ளது.சட்டசபையில், அ.தி. மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள்; தி.மு.க., விற்கு, 89; காங்கிரசுக்கு எட்டு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு, ஒரு எம்.எல்.ஏ.,வும் உள்ளனர். ஒரு தொகுதி காலியாக உள்ளது.

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், தி.மு.க., தலைவர் கருணா நிதி, உடல் நலக்குறைவால், சட்டசபைக்கு வருவது சிரமம்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களில், சபாநாயகர் தனபால், ஓட்டளிக்க இயலாது. சம நிலை ஏற்படும் போது மட்டுமே, அவர் ஓட்டளிக்க முடியும். மீத முள்ள, 134அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களில், 19 பேர் தினகரன் அணியில் உள்ளனர்.

அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, கூட்டணி கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர், இன்னமும் முடி வெடுக்கவில்லை என, தெரிவித்துள்ளனர்.

எனவே, தற்போதைய நிலையில், முதல்வர் பழனி சாமிக்கு ஆதரவாக, 112 எம்.எல்.ஏ.,க் கள் மட்டுமே உள்ளனர். மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்க, இன்னும், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் தேவை.

எனவே, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தினகரன் அணி எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் பக்கம் இழுக்க, முதல்வர் தரப்பினர் முயற்சித்து வருகின்ற னர்.ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை குறித்து, நேற்று முன்தினம் தலைமை செயலகத் தில், முதல்வர்பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

நேற்று காலை, 10:00 மணிக்கு, முதல்வர் பழனி சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர், அரிய லுார் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்ப தற்காக, ஒரே விமானத்தில் சென்றனர். அப்போதும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து உள்ளனர்.திருச்சியில் இருந்து காரில், பெரம்ப லுார் சென்றனர். அங்கு, மதிய உணவு முடித்த தும், அமைச்சர்களுடன் ஆலோசித்தனர். அப்போது, தினகரன், துணைப் பொதுச்செயலர் எனக்கூறி, அமைச்சர்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தினகரன் வசமுள்ள, எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்தினரிடம் பேசி, அவர்களை தங்கள் பக்கம் இழுப்பது குறித்தும், ஆலோசிக்கப்பட் டதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த கட்டமாக பொதுக் குழுவை கூட்டுவது குறித்து முடிவு செய்ய அமைச்சர்கள் அனைவரையும் சென்னை வர முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 10.07.2026