பழைய கட்டணத்தில் சேர்க்க நடத்த உத்தரவு
பதிவு செய்த நாள்24ஆக
2017
00:49
சென்னை: பழைய கட்டணம் பெற்று, மூன்று மாணவர்களை சேர்க்கும்படி, புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவக் கல்லுாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த, லட்சணா ஸ்ரீ உட்பட மூவருக்கு, வெங்கேடஸ்வரா, மணக்குள விநாயகர், புதுச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ஆகிய கல்லுாரிகளில், 2016 - 17க்கு, இடம் கிடைத்தது. கல்லுாரிகளில் சேர முடியவில்லை.
கட்டண நிர்ணய குழு குறிப்பிட்ட, 3.50 லட்சம் ரூபாயை செலுத்த அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மூவரும் மேல்முறையீடு செய்தனர். மனுக்களை, நீதிபதிகள் ராஜிவ் ஷக்தர், அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.
மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர், எம்.ரவி, ''கல்லுாரிகள் கோரிய அதிக கட்டணத்தை, மனுதாரர்களால் செலுத்த முடியவில்லை. அதனால், மாணவர்களுக்கு அந்த கல்லுாரிகளில் இடம் கிடைக்கவில்லை. தற்போது, 12 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தும்படி கூறுகின்றனர். இந்த மாணவர்களுக்கு, 2016 - 17ல் அனுமதி கிடைத்தது. அதிகாரிகளின் தவறால், சேர முடியவில்லை. அவர்கள், 3.50 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, பழைய கட்டணமான, 3.50 லட்சம் ரூபாய் பெற்று கொண்டு, மூன்று மாணவர்களையும், புதுச்சேரியைச் சேர்ந்த, மூன்று தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர்க்கும்படி, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.
பதிவு செய்த நாள்24ஆக
2017
00:49
சென்னை: பழைய கட்டணம் பெற்று, மூன்று மாணவர்களை சேர்க்கும்படி, புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவக் கல்லுாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த, லட்சணா ஸ்ரீ உட்பட மூவருக்கு, வெங்கேடஸ்வரா, மணக்குள விநாயகர், புதுச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ஆகிய கல்லுாரிகளில், 2016 - 17க்கு, இடம் கிடைத்தது. கல்லுாரிகளில் சேர முடியவில்லை.
கட்டண நிர்ணய குழு குறிப்பிட்ட, 3.50 லட்சம் ரூபாயை செலுத்த அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மூவரும் மேல்முறையீடு செய்தனர். மனுக்களை, நீதிபதிகள் ராஜிவ் ஷக்தர், அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.
மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர், எம்.ரவி, ''கல்லுாரிகள் கோரிய அதிக கட்டணத்தை, மனுதாரர்களால் செலுத்த முடியவில்லை. அதனால், மாணவர்களுக்கு அந்த கல்லுாரிகளில் இடம் கிடைக்கவில்லை. தற்போது, 12 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தும்படி கூறுகின்றனர். இந்த மாணவர்களுக்கு, 2016 - 17ல் அனுமதி கிடைத்தது. அதிகாரிகளின் தவறால், சேர முடியவில்லை. அவர்கள், 3.50 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, பழைய கட்டணமான, 3.50 லட்சம் ரூபாய் பெற்று கொண்டு, மூன்று மாணவர்களையும், புதுச்சேரியைச் சேர்ந்த, மூன்று தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர்க்கும்படி, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.
No comments:
Post a Comment