Saturday, August 26, 2017

நள்ளிரவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

பதிவு செய்த நாள்25ஆக
2017
20:30

சென்னை : நான்கு மாவட்ட கலெக்டர்கள் உட்பட, 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டதும், அதற்கான அரசாணை, நள்ளிரவில் வெளியானதும், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தமிழக அரசு, நேற்று முன்தினம், நான்கு மாவட்ட கலெக்டர்கள் உட்பட, 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்தது.இதற்கான அரசாணை, இரவு, 11:00 மணிக்கு வெளியானது. பள்ளிக் கல்வித் துறை செயலர், உதய சந்திரனுக்கும், துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே, மோதல் ஏற்பட்டது. இதனால், பள்ளிக் கல்வித் துறையில் முதன்மை செயலர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டு, அந்தப் பொறுப்பிற்கு, பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்விபரம், பகல் நேரத்தில் வெளியானால், பெரும் விவாதத்தை உருவாக்கும் என்பதால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் அரசாணையை, நள்ளிரவில் அரசு வெளியிட்டதாக கூறப்படுகிறது.



No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...