மருத்துவ கல்வி சேர்க்கையில்போலி இருப்பிட சான்றிதழ்
பதிவு செய்த நாள்25ஆக
2017
19:00
சென்னை, ''மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, போலி இருப்பிட சான்றிதழ் அளிக்கும் மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
பதிவு செய்த நாள்25ஆக
2017
19:00
சென்னை, ''மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, போலி இருப்பிட சான்றிதழ் அளிக்கும் மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர், அஜ்மத் அலி; வழக்கறிஞர். பட்டியலில் ஆய்வுஇவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார்:கேரளா மருத்துவக் கல்வி குழு மற்றும் தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட தரிவரிசை பட்டியல்களை ஆய்வு செய்தேன். அதில், கேரளா முகவரியில் விண்ணப்பித்திருந்த, ஒன்பது பேர், தமிழகத்திலும் வசிப்பது போல், இருப்பிட சான்றிதழ் பெற்றுள்ளனர்; அதை பயன்படுத்தி, இரு மாநிலங்களிலும், மருத்துவ இடம் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.
இவ்வாறு, புகார் அளித்திருந்தார்.இது குறித்து, சென்னையில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:மருத்துவம் படிக்க, கேரளாவைச் சேர்ந்த ஒன்பது பேர், போலி இருப்பிட சான்றிதழ் அளித்தாக புகார்கள் வந்துள்ளன. இதை தடுக்க, மாணவர்களிடம் உறுதிமொழி சான்றிதழ்கள் வாங்கப்படுகின்றன. நடவடிக்கைபோலி இருப்பிட சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல், அகில இந்திய கவுன்சிலிங் மற்றும் நிகர்நிலை பல்கலையில் இடம் கிடைத்த மாணவர்கள், மாநில கவுன்சிலிங்கில் இடம் பெற முடியாது. அது போன்று, இடம் பெற்ற மாணவர்கள் கண்டறியப்பட்டாலும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -
No comments:
Post a Comment