Saturday, August 26, 2017



'முத்தலாக் நடைமுறை செல்லும்!'   முஸ்லிம் மத தலைவர் கருத்து

ஐதராபாத்'மூன்று முறை, 'தலாக்' கூறி விவா கரத்து பெறும் முறை தவறு, பாவச் செயல்; ஆனால், மூன்று முறை தலாக் கூறி, விவா கரத்து பெறுவது செல்லும்' என, ஜமாயித்தே உலாமா ஹிந்த் அமைப்பின் தெலுங்கானா, ஆந்திரா பிரிவு தலைவர் கூறியுள்ளார்.





பாவச் செயல்

'முஸ்லிம்களின், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் முறை, சட்டவிரோத மானது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.இந்நிலையில், முஸ்லிம் மதத் தலைவர்கள் அடங்கிய, முஸ்லிம்களின் சமூக - மத அமைப்பான, ஜமாயித்தே உலாமா ஹிந்த் அமைப்பின், ஆந்திரா மற்றும் தெலுங்கானா பிரிவின் தலைவர், ஹபீஸ் பீர் ஷப்பீர் கூறியதாவது:

எங்கள் அமைப்பின் மத்திய குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதித்தோம். உடனடி விவாகரத்து பெறும் முத்தலாக் முறை தவறு, பாவச் செயல், அதை பயன்படுத்தக் கூடாது என்பதை நாங்கள் ஏற்கிறோம்.அதே நேரத்தில், ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறினால், திருமணம் ரத்தாகும் முறை தொடரும். இவ்வாறு மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றால், நீதிமன்ற அவமதிப் பாக எடுத்துக் கொள்வார்களா?உடனடி விவாகரத்து முறையின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மதத் தலைவர்கள் தவறிவிட்டனர். இந்த பாவச் செயலை தடுக்க முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுவிட்டது; பலர் தவறாகப் பயன் படுத்துகின்றனர்; இதை தவிர்த்திருக்கலாம்.

நிதி உருவாக்கப்படும்

முத்தலாக் தீர்ப்பின் மூலம், ஷரியத் சட்டத்தில், நீதிமன்றம் தலையிட்டுள்ளது. இது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான அரசின் முயற்சி. முஸ்லிம் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வருகிறோம். முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உதவும் வகையில், ஒரு நிதி உருவாக்கப்படும்.ஷரியத் சட்டம், விவாகரத்தை ஏற்கவில்லை. அதனால், மூன்று முறை தலாக் கூறும் முறையை பயன்படுத்த வேண்டாம் என, முஸ்லிம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள் ளோம்.இவ்வாறு அவர்கூறினார்.

வழக்கு தொடர்ந்தவருக்கு சிக்கல்

முத்தலாக் முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த, முஸ்லிம் பெண்களில் முக்கியமானவர், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்த, இஷ்ரத் ஜகான். 2004ல் திருமணமான இவருடைய கணவர் வெளிநாட்டில் உள்ளார்; 2014ல், வெளிநாட்டில் இருந்தபடியே, தொலை பேசி மூலம், மூன்று முறை தலாக் கூறி, கணவர் விவாகரத்து பெற்றார்.உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், தான் புறக்கணிக்கப்படுவ தாக, இஷ்ரத் கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் மட்டும் மாற்றங்கள் ஏற்பட்டு விடாது. மக்களிடையே, சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். தீர்ப்புக்கு பின், என்னுடன் பேசுவதை, எங்கள் பகுதியில் உள்ளவர்களும், உறவினர்களும் நிறுத்திக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில், முஸ்லிம் பெண்களின் சமூக நீதிக்கான என்னுடைய போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

மீரட்டில் முதல் வழக்கு

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பின், முத்தலாக் கூறி விவாகரத்து பெற்றதாக, உத்தர பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த ஒருவர் மீது, அவருடைய மனைவி போலீசில் புகார் கொடுத் துள்ளார்.முத்தலாக் சட்டவிரோத மானது என்று உச்ச நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பு கூறியது. அதன்பின், மீரட்டைச் சேர்ந்த சிராஜ் அலி என்பவர், தன் மனைவி, ஆர்ஷி பேகத்தை, பொது இடத்தில், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றார்.

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வும், அதை தராததால் விவாகரத்து பெற்றதாக வும், ஆர்ஷி பேகம், போலீசில் புகார் கொடுத் துள்ளார். குடும்ப வன்முறை சட்டம் மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், சிராஜ் அலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...