Sunday, August 27, 2017

வங்கி ஏ.டி.எம்.,களில் 200 ரூபாய் கிடைக்குமா?
பதிவு செய்த நாள்27ஆக201702:36

தமிழகத்தில், வங்கி ஏ.டி.எம்.,களில், 200 ரூபாய் நோட்டுகள், எப்போது கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி, வரலாற்றில் முதல் முறையாக, 200 ரூபாய் நோட்டுகளை, 17ம் தேதி அறிமுகம் செய்துள்ளது. அந்த நோட்டுகள், சென்னையில் உள்ள, ரிசர்வ் வங்கி கிளைக்கு அனுப்பப்பட்டுள்ளன. வங்கிகளில், நாளை அல்லது நாளை மறுநாள் முதல், புழக்கத்திற்கு வரும்.
கிராமப்புறங்களில் உள்ள, வங்கிகளில் சென்று சேருவதற்கு, ஒரு வார காலமாகும். அதேபோல், புதிய, 50 ரூபாய் நோட்டும், நாளை முதல், வங்கிகளில் புழக்கத்திற்கு வரும். வழக்கமாக, புதிய நோட்டுகள் அறிமுகமாகும் போது, அது, நகரப் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.,களில், உடனடியாக கிடைக்கும்.

'புதிய, 200 ரூபாய் நோட்டு, வடிவத்தில் மாறுபடுவதால், அதற்கேற்ப, ஏ.டி.எம்.,களில், சிறிய மாற்றம் செய்ய வேண்டி உள்ளது. அதனால், வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும்' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...