எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையில், மூன்று நாட்களில், 2,500 இடங்கள் நிரம்பிஉள்ளன.
பதிவு செய்த நாள்27ஆக
2017
02:37
சென்னை:எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையில், மூன்று நாட்களில், 2,500 இடங்கள் நிரம்பிஉள்ளன.தமிழகத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 'நீட்' தேர்வு அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
தமிழக அரசின் மாநில ஒதுக்கீட்டில், 3,534 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரி களில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 592 இடங்கள் உள்ளன.அதேபோல, பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 1,198 இடங்கள் உள்ளன; சுயநிதி கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 715 இடங்கள் உள்ளன.
முதற்கட்டமாக, எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை, சென்னை பல்நோக்கு அரசு மருத்துவமனையில், 24ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில், மூன்று நாட்களில், 2,500க்கும் மேற்பட்ட இடங்களை, மாணவர்கள் பெற்றுள்ளனர். இன்று நடைபெறும் கவுன்சிலிங்கில், தரவரிசை பட்டியலில், 2,674 முதல், 4,269 இடங்களை பிடித்தோர் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment