'ரேஸ் கோர்ஸ்' பேருந்து நிலையம் ஆக்கிரமிப்பு
பதிவு செய்த நாள்26ஆக
2017
21:02
பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்களால், பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.
சென்னை, அண்ணா சாலையில் இருந்து செல்லும் அனைத்து பேருந்துகளும், கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது. இதனால், அச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதற்கு தீர்வாக, ரேஸ்கோர்ஸ் வளாகத்தின் ஒரு பகுதி பெறப்பட்டு பேருந்து நிலையமும், பேருந்து, ஷேர் ஆட்டோக்களுக்கு தனித்தனி வழித்தடம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், பேருந்து நிலைய சாலையை ஆக்கிரமித்து நிற்கும் ஷேர் ஆட்டோக்களால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார், காவல் துறையிரிடம் புகார் செய்தால் நடவடிக்கை இல்லை.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
தனியாரிடம் நிலம் பெற்று சாலை விரிவாக்கம் செய்தும், ஷேர் ஆட்டோக்களின் ஆக்கிரமிப்பால் பயனில்லாமல் போனது. இங்கு, ஷேர் ஆட்டோக்களுக்காக தனி வழித்தடம் அமைக்கப்பட்டது. ஆனால், பேருந்து நிலையத்திலேயே ஆட்டோக்களை நிறுத்தி அடாவடி செய்கின்றனர். ஷேர் ஆட்டோ ஓட்டுனரிடம் இருந்து பணம் பெறும் போக்குவரத்து போலீசார், புகார் அளித்தால் கண்டுகொள்வதில்லை.சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
பதிவு செய்த நாள்26ஆக
2017
21:02
பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்களால், பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.
சென்னை, அண்ணா சாலையில் இருந்து செல்லும் அனைத்து பேருந்துகளும், கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது. இதனால், அச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதற்கு தீர்வாக, ரேஸ்கோர்ஸ் வளாகத்தின் ஒரு பகுதி பெறப்பட்டு பேருந்து நிலையமும், பேருந்து, ஷேர் ஆட்டோக்களுக்கு தனித்தனி வழித்தடம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், பேருந்து நிலைய சாலையை ஆக்கிரமித்து நிற்கும் ஷேர் ஆட்டோக்களால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார், காவல் துறையிரிடம் புகார் செய்தால் நடவடிக்கை இல்லை.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
தனியாரிடம் நிலம் பெற்று சாலை விரிவாக்கம் செய்தும், ஷேர் ஆட்டோக்களின் ஆக்கிரமிப்பால் பயனில்லாமல் போனது. இங்கு, ஷேர் ஆட்டோக்களுக்காக தனி வழித்தடம் அமைக்கப்பட்டது. ஆனால், பேருந்து நிலையத்திலேயே ஆட்டோக்களை நிறுத்தி அடாவடி செய்கின்றனர். ஷேர் ஆட்டோ ஓட்டுனரிடம் இருந்து பணம் பெறும் போக்குவரத்து போலீசார், புகார் அளித்தால் கண்டுகொள்வதில்லை.சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment