Tuesday, August 15, 2017

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது - டி.எம்.இ., தகவல்

பதிவு செய்த நாள்15ஆக
2017
00:37




சென்னை : ''தமிழக அரசு மருத்துவ மனைகளில், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை,'' என, டி.எம்.இ., எனப்படும், மருத்துவக் கல்வி இயக்குனர், எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம்,கோரக்பூரில் உள்ள, அரசு மருத்துவமனையில்,ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், ஐந்து நாட்களில், மூளை வீக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த, 63 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.

ஒப்பந்த நிறுவனத்திற்கு, 67 லட்சம் ரூபாயை அரசு தராததால், அந்நிறுவனம், ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தியதால், இந்த கொடூரம் நடந்தது தெரிய வந்துள்ளது.இது, மற்ற மாநிலங்களுக்கும் எச்சரிக்கை போல் நடந்துள்ளது. தமிழகத்திலும் அதுபோன்ற பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்தள்ளது. ஆனால், 'அதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை' என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

இது குறித்து, தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறியதாவது:தமிழகத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு மருத்துவமனையிலும், திரவ ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் உள்ளன. அதில் இருந்து, வார்டுகளில், ஒவ்வொரு படுக்கை அறைக்கும், குழாய் வழியே, திரவஆக்சிஜன் எடுத்து செல்லப்படுகிறது.

மேலும், மருத்துவமனைகளில், 40 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வரை இருப்பில் உள்ளன. எனவே, உ.பி.,யில் நடந்தது போன்ற சம்பவம், தமிழகத்தில் நடக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...