Thursday, August 17, 2017

தோல்வி தான் என்னை உலகளவில் சாதிக்க வைத்தது : பாராட்டு விழாவில் ஆடிட்டர் ஜி.சேகர் பேச்சு

பதிவு செய்த நாள்17ஆக
2017
00:09




விருதுநகர்: ''சி.ஏ., தேர்வில் 32 மதிப்பெண் எடுத்து தோல்வியடைந்தேன். அந்த தோல்வி தான் இன்றைக்கு உலகளவில் சாதிக்க வைத்துள்ளது,'' என விருதுநகரில் நடந்த பாராட்டு விழாவில் ஆடிட்டர் ஜி.சேகர் பேசினார்.

உலக அளவில் கணக்குப்பதியவியல் கல்வி நிர்ணய வாரியத்தின் பசிபிக் பிராந்திய கணக்குத் தணிக்கையாளர்களின் பிரதிநிதியாக இந்தியாவிலிருந்து முதன்முறையாக ஆடிட்டர் ஜி.சேசகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான் போன்ற 23 நாடுகளைச் சேர்ந்த அகில உலக சர்வதேச கணக்குப்பதியவியல் கல்வி நிர்ணய வாரிய பிரதிநிதி போட்டியில், பசிபிக் பிராந்திய கூட்டமைப்பின் பிரதிநிதியாக பலருடன் போட்டியிட்டு , குறிப்பாக சீனாவைச் சேர்ந்த ஒருவரை வென்று இந்த பதவியை பெற்றுள்ளார். ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமலாக்க ஏற்பாடு செய்தபோது அமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி ஆலோசனைக் குழுவில் பணியாற்றி வருபவர். அவருக்கு விருதுநகர் வியாபாரத் தொழில் துறைச் சங்கத்தின் சார்பில் நேற்று பராட்டு விழா நடந்தது. சங்க தலைவர் யோகன், செயலாளர் முத்து, பொருளாளர் வெற்றிவேல் வரவேற்றனர். 'தலைமைசால் தணிக்கைச் செம்மல்' என்ற பட்டத்தை ஹட்சன் நிறுவன தலைவர் சந்திரமோகன் வழங்கினார். இதில் விருதுநகர் ஆடிட்டர் அசோஷியேசன், சிவகாசி ஆடிட்டர் அசோஷியேசனை சேர்ந்த ஆடிட்டர்கள் அவரை பாராட்டினர். விருதுநகரில் அவர் படித்த சுப்பையா நாடார் பள்ளியின் தலைமையாசிரியர் சுப்புராஜ் வாழ்த்தி பேசினார்.

ஆடிட்டர் ஜி.சேகர் பேசியதாவது: விருதுநகரில் படித்த பள்ளி, கல்லுாரியில் எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அனைவரையும் நான் மறக்கவில்லை. விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் நிலக்கரி அள்ளிப் போடும் கூலித் தொழிலாளியாக என் தந்தை இருந்தார். அவருடைய மாத சசம்பளம் ரூ.150. அப்போது நான் இன்ஜினியராக ஆக ஆசைப்பட்டேன். ஆனால் சூழ்நிலையால் அது முடியவில்லை. அதன்பின் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் பி.காம்., சேர்ந்தேன். என் கல்லுாரியில் உள்ள நுாலகம் தான் எனக்கு கோயில். என்னுடைய உயர்வுக்கு காரணம் அங்கிருந்த பலதரப்பட்ட புத்தகங்கள் தான். பின் சி.ஏ., தேர்வில் 32 மதிப்பெண் எடுத்து தோல்வியடைந்தேன். அந்த தோல்வி தான் இன்றைக்கு உலகளவில் சாதிக்க வைத்துள்ளது. 32 மதிப்பெண் எடுத்ததால் ரேங்க் பட்டியலில் இடம் பெற முடியவில்லை. நம்மால் ரேங்க் பட்டியலில் இடம் பெற முடியாவிட்டாலும், பல மாணவர்களை ரேங்க் பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும் என முடிவு எடுத்தேன். தற்போது வரை 17 மாணவர்கள் ரேங்க் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். ஜி.எஸ்.டி., என்பது புதிய சட்டம் அல்ல, ஏற்கனவே இருந்த 17 சட்டங்களில் இருந்த உருவான ஒரு சட்டம். உலகில் எந்த அரசாங்கமும் இந்த ரிஸ்க்கை எடுக்கவில்லை, மத்திய அரசு எடுத்துள்ளது. 2002 ல் வரவேண்டியது, 2007ல் வரவேண்டியது, 2017 ஜீலையில் தான் வந்துள்ளது. கடலைமிட்டாய்க்கு 17 சதவீதம் வரியில்லை 5 சதவீதம் தான் வரி. பஞ்சாப்பில் அரிசி மாவுக்கு வரி, கோதுமை மாவுக்கு வரியில்லை. தமிழகத்தில் அரிசி மாவுக்கு வரியில்லை, கோதுமை மாவுக்கு வரி. சில மாநிலங்களில் சில வரிகள் மாறுபடும். பொரிக்கடலைக்கு வரி என்றால், வெளிமாநிலங்களில் இருந்து வருவதால் வரி உண்டு. அதுபோல் வருமானவரித்துறையினர் ஆய்வுக்கு வருகிறார்கள் என்றால் பயப்பட தேவையில்லை. அப்படியே வரி கட்டவில்லை என்றாலும் , அதற்கு தகுந்தற்போல் கால அவகாசம் கேட்டு கொள்ளலாம். அவர்களிடம் அடையாள அட்டை இல்லையென்றால் வீட்டிற்குள் விடத் தேவையில்லை. சட்டத்தில் குடிமக்களுக்கான உரிமைகளை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதுபோல் ஒரு புது வீடு கட்டுகிறோம், கட்டியபின் வீட்டிற்குள் சென்றபின் ,சில மாற்றங்களை செய்யலாம் என நினைக்கின்றோம். ஆனாலும் ஒரு ஆறு மாதம் தங்கி பார்த்தப்பின் முடிவு செய்து கொள்ளலாம் என நினைக்கின்றோம். அதுபோல தான் ஒரு புதுச்சட்டம் வந்துள்ளது, அதில் சில மாற்றங்கள் செய்யலாம் என்றாலும், 6 முதல் 9 மாதங்கள் போனால் தான் தெரியும். சங்கத்தின் மூலம் ஜி.எஸ்.டி குறித்து கோரிக்கைகளை வழங்கியுள்ளீர்கள், இதற்கு முன் இருந்த வரிக்கும், தற்போது உள்ள வரிக்கும் உள்ள வித்தியாசத்தை ஒப்பிட்டு பார்த்து தகுந்த ஆதார ஆவணங்களுடன் வழங்கினால் , மத்திய அரசிடம் தைரியாக எடுத்து கூறுவேன். இவாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...