'க்யூரேட்டிவ்' மனு: சசிகலாவின் கடைசி ஆயுதம்
'மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடைசியாக, 'க்யூரேட்டிவ்' மனு தாக்கல் செய்ய, சசிகலாவுக்கு வாய்ப்பு உள் ளது. அதிலும், அவருக்கு நிவாரணம் கிடைக் குமா என்பது சந்தேகமே' என, சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனையை, பெங்க ளூரு சிறப்பு நீதிமன்றம் விதித்தது. ஜெ., மரணத்தை தொடர்ந்து, ஜெ., மீதான மேல் முறையீட்டு வழக்கை கைவிட்டு, மற்றவர் களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, சசி கலா உள்ளிட்ட மூவரும், உச்ச நீதிமன்றத்தில்
மனுக்கள் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான, பி.சி.கோஷ் ஓய்வு பெற்று விட்டார். அதனால், வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதி அமித்வ ராய் உடன், நீதிபதி பாப்டே அமர்ந்து, மறு ஆய்வு மனுவை விசாரித்தார்.
'உச்ச நீதிமன்ற உத்தரவில், எந்த தவறும்இருப்பதாக தெரியவில்லை; மறு ஆய்வு கோரிய மனு, தள்ளு படி செய்யப்படுகிறது' என, உச்ச நீதி மன்றம், நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதற்கு அடுத்ததாக, கடைசி வாய்ப்பாக, இறுதி நிவாரண மனுவாக கருதப்படும், க்யூரேட்டிவ் மனுவை தாக்கல் செய்ய முடியும். க்யூரேட்டிவ் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றால், உச்ச நீதிமன்றம் விதித் துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
தேவையான விபரங்கள், மனுவில் பூர்த்தி செய்யப் பட்டுள்ளது என்பதை, மூத்த வழக்கறிஞர் ஒருவர் உறுதி செய்ய வேண்டும். மனு, விசாரணைக்கு ஏற்பு உடையதா, இல்லையா என்பதை முடிவு செய்ய, நீதிபதிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு அனுப்பும் படி, தலைமை நீதிபதி உத்தரவிடுவார். அதன்பின், மூத்த நீதிபதிகள் மூவர் மற்றும் ஏற்கனவே வழக் கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு, க்யூரேட்டிவ் மனு அனுப்பப்படும்.
மனுவை விசாரிக்க வேண்டிய தேவை இருப் பதை, பெரும்பான்மை நீதிபதிகள் ஒப்புக் கொண்டால்,பின், ஏற்கனவே வழக்கை விசாரித்த நீதிபதி களுக்கு, க்யூரேட்டிவ் மனு அனுப்பப்படும். வழக்கில் தகுதியில்லை என, நீதிபதிகள் கருதி னால், மனுதாரருக்கு, அபராதமும் விதிக்க முடியும்.
இது குறித்து, மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, 'மறு ஆய்வு மனுவே, பெரும் பாலும் நிலைக்காது; தள்ளுபடி தான் ஆகும். க்யூரேட்டிவ் மனுவை தாக்கல் செய்யலாம். 'அது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு.மறு ஆய்வு மனுவை போலவே, க்யூரேட்டிவ் மனுவிலும், நிவாரணம் கிடைப்பது என்பது மிக மிக அரிது' என்றார்.
- நமது நிருபர் -
'மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடைசியாக, 'க்யூரேட்டிவ்' மனு தாக்கல் செய்ய, சசிகலாவுக்கு வாய்ப்பு உள் ளது. அதிலும், அவருக்கு நிவாரணம் கிடைக் குமா என்பது சந்தேகமே' என, சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனையை, பெங்க ளூரு சிறப்பு நீதிமன்றம் விதித்தது. ஜெ., மரணத்தை தொடர்ந்து, ஜெ., மீதான மேல் முறையீட்டு வழக்கை கைவிட்டு, மற்றவர் களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, சசி கலா உள்ளிட்ட மூவரும், உச்ச நீதிமன்றத்தில்
மனுக்கள் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான, பி.சி.கோஷ் ஓய்வு பெற்று விட்டார். அதனால், வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதி அமித்வ ராய் உடன், நீதிபதி பாப்டே அமர்ந்து, மறு ஆய்வு மனுவை விசாரித்தார்.
'உச்ச நீதிமன்ற உத்தரவில், எந்த தவறும்இருப்பதாக தெரியவில்லை; மறு ஆய்வு கோரிய மனு, தள்ளு படி செய்யப்படுகிறது' என, உச்ச நீதி மன்றம், நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதற்கு அடுத்ததாக, கடைசி வாய்ப்பாக, இறுதி நிவாரண மனுவாக கருதப்படும், க்யூரேட்டிவ் மனுவை தாக்கல் செய்ய முடியும். க்யூரேட்டிவ் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றால், உச்ச நீதிமன்றம் விதித் துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
தேவையான விபரங்கள், மனுவில் பூர்த்தி செய்யப் பட்டுள்ளது என்பதை, மூத்த வழக்கறிஞர் ஒருவர் உறுதி செய்ய வேண்டும். மனு, விசாரணைக்கு ஏற்பு உடையதா, இல்லையா என்பதை முடிவு செய்ய, நீதிபதிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு அனுப்பும் படி, தலைமை நீதிபதி உத்தரவிடுவார். அதன்பின், மூத்த நீதிபதிகள் மூவர் மற்றும் ஏற்கனவே வழக் கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு, க்யூரேட்டிவ் மனு அனுப்பப்படும்.
மனுவை விசாரிக்க வேண்டிய தேவை இருப் பதை, பெரும்பான்மை நீதிபதிகள் ஒப்புக் கொண்டால்,பின், ஏற்கனவே வழக்கை விசாரித்த நீதிபதி களுக்கு, க்யூரேட்டிவ் மனு அனுப்பப்படும். வழக்கில் தகுதியில்லை என, நீதிபதிகள் கருதி னால், மனுதாரருக்கு, அபராதமும் விதிக்க முடியும்.
இது குறித்து, மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, 'மறு ஆய்வு மனுவே, பெரும் பாலும் நிலைக்காது; தள்ளுபடி தான் ஆகும். க்யூரேட்டிவ் மனுவை தாக்கல் செய்யலாம். 'அது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு.மறு ஆய்வு மனுவை போலவே, க்யூரேட்டிவ் மனுவிலும், நிவாரணம் கிடைப்பது என்பது மிக மிக அரிது' என்றார்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment