Monday, September 11, 2017

லைசென்ஸ் கோரி 2 லட்சம் விண்ணப்பம் அரசின் கிடுக்கிப்பிடியால் ஆர்வம்
பதிவு செய்த நாள்10செப்
2017
21:43



சென்னை : அரசின் கிடுக்கிப்பிடி காரணமாக, ஒரே வாரத்தில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர், லைசென்ஸ் கோரி, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் விண்ணப்பித்துள்ளனர்.

வாகன ஓட்டிகள், செப்., 1 முதல், ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பது, கட்டாயமாகி உள்ளது. இதை, சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதனால், ஆர்.டி.ஓ., எனப்படும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு, பழகுனர் லைசென்ஸ், ஒரிஜினல் லைசென்ஸ் கோரி வருவோரின் எண்ணிக்கை, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

எனவே, விடுமுறை தினமான சனியன்றும், தமிழகம் முழுவதும், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் செயல்பட்டன.இது குறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:தமிழக அரசின் அறிவிப்பு, வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், 100 பேர் தான், பல்வேறு விதமான லைசென்ஸ் கோரி விண்ணப்பிப்பது வழக்கம். தற்போது, தினமும், 500 பேர் வருகின்றனர்.

ஒரு வாரத்தில் மட்டும், இரண்டு லட்சம் பேர், பழகுனர் லைசென்ஸ், டிரைவிங் லைசென்ஸ் கோரி, விண்ணப்பம் செய்துஉள்ளனர்.விதிமீறலில் ஈடுபடுவோரின் லைசென்ஸ், மூன்று மாதங்கள் வரை, 'சஸ்பெண்ட்' செய்யப்படும். ஆனால், அவர்கள், நகல் லைசென்ஸ் வைத்து, வாகனம் ஓட்டுவர். தற்போது, அவ்வாறு செய்ய இயலாது.

ஒரிஜினல் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே, இனி, வாகனங்களை ஓட்ட முடியும். அதனால், சாலை விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...